பிணைக்கான நிபந்தனைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்றிய பிறகும், மேற்கண்ட 31 வெளிநாட்டு இஸ்லாமியர்களையும் கொரோனா பரவும் புழல் சிறையில் அடைத்து வைத்திருப்பதும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத அளவிற்கு இவர்களை அதிமுக அரசு துன்புறுத்தி வருவதும் சட்ட விரோதமானது. மத்திய அரசே இதுகுறித்து வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிரானது.
தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த வெளிநாட்டு இஸ்லாமியர்களை பாஜக ஆளும் மாநிலங்களில்கூட இல்லாத அளவுக்கு அதிமுக அரசு துன்புறுத்தி வருவது சட்ட விரோதமானது என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்துக்கு 9 நாடுகளிலிருந்து வந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் 15 வெவ்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அதிமுக அரசு கைது செய்து, அவர்களை எல்லாம் மத்திய அரசு வகுத்துள்ள “தடுப்பு மற்றும் சிறப்பு முகாம்கள்” விதிகளுக்கு மாறான இடங்களில், சுகாதார வசதி, உணவு வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நெருக்கடி மிகுந்த சிறார் இல்லங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

