Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அலுவலக சாவி யாருக்கு..? ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்...! உற்சாகத்தில் இபிஎஸ்

அ.தி.மு.க தலைமை கழக அலுவலக சாவியை ஈ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

Supreme Court rejects OPS plea in AIADMK office key case
Author
Delhi, First Published Aug 18, 2022, 12:40 PM IST

அதிமுக அலுவலகத்திற்கு சீல்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால்  ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்ட நிலையில் கட்சி அலுவலகம் வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலக சாவியை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  அதேநேரத்தில் இவ்வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும கேவிட் மனு தாக்கல் செய்த நிலையில்,  இன்றைய தினம் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  

இரட்டை இலையை முடக்க வேண்டும்...! உச்சநீதிமன்றத்தில் வழக்கு... எச்சரிக்கை விடுத்த நீதிபதி

Supreme Court rejects OPS plea in AIADMK office key case

உச்சநீதிமன்றம் மறுப்பு

வழக்கு விசாரணை தொடங்கியதும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இவ்வழக்கை முழுமையாக விசாரித்ததற்குப் பிறகு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும். அதனால் வழக்கில் எதிர்மனுதாரர்களான ஈ.பி.எஸ், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாக உத்தரவிட்டார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு சாதகமான உத்தரவை வழங்கி இருப்பதாகவும் ஆதனால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து முடிக்கும் வரை சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  ஆனால் இந்த வழக்கை தீர விசாரித்த பின்னரே  எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும் என  கூறிய தலைமை நீதிபதி,  வழக்கை ஒரு வாரத்திற்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக்கூறி ஒத்திவைத்தார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் சந்தோஷத்திற்கு செக் வைக்கும் இபிஎஸ்...! பொதுக்குழு தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு

 

Follow Us:
Download App:
  • android
  • ios