திமுக கட்சியினுடைய எல்லாவற்றையும் எதிர்க்கும் எதிர்மறை சித்தாந்தம் கட்சித் தலைவராக அவர் கண்களை மறைத்து விடுகிறது. இதனால் நடுநிலையாக எந்தவித சார்புகளும் இல்லாமல் மக்கள் நலத்திற்கான முதலமைச்சர் என்ற கடமையை அவரால் சரியாக செய்ய முடியவில்லை. 

திமுக கட்சியினுடைய எல்லாவற்றையும் எதிர்க்கும் எதிர்மறை சித்தாந்தம் கட்சித் தலைவராக அவர் கண்களை மறைத்து விடுகிறது. இதனால் நடுநிலையாக எந்தவித சார்புகளும் இல்லாமல் மக்கள் நலத்திற்கான முதலமைச்சர் என்ற கடமையை அவரால் சரியாக செய்ய முடியவில்லை. 

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரிலே கலவரத்திற்கு திட்டமிடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாடிக்கை. கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் என்ற பெயரிலே கொடி கட்டி வந்த கம்பால் அடிப்பதும், கொடி கம்பங்களை வீசுவதும், கொடியில் மறைத்து எடுத்து வந்த கற்களை வீசி தாக்குதல் திமுகவினருக்கு கைவந்த கலை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரை மதுரை தெற்கு வாசலில் பெண்ணென்றும் பாராமல் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் கற்களை வீசி தாக்கியதும், ரத்தம் வடிய நின்றபோது அவர் பெண்மையை கேலிசெய்து பேசியதும் திமுகவின் சரித்திரம் சாதனைகளில் ஒன்று. தமிழ்நாட்டின் ஆளுநரை தாக்குவதற்கு தமிழக காவல்துறை எப்படி அனுமதிக்கிறது, அதுவும் ஆளுநரின் வாகனம் செல்லும் சாலையின் ஓரத்தில் நின்று கற்களையும் கம்பையும் வீசும் தொலைவிலே போராட்டத்தை நடத்த எப்படி அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் கவலையளிக்கிறது. காவல்துறை இந்த குற்றச் செயலை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் ஆளுநரே தாக்கப்பட்ட பிறகு இப்போதுதான் புரிகிறது காவல்துறையே முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லையோ என்று நமக்குத்தான் தெரியுமே, திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் காவல்துறை திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் கலந்துகொள்ள விரிந்த தருமை ஆதீனத்திற்கு நேரில் சென்ற திமுகவினர் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். தருமை ஆதீனத்தின் நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பண்டைத் தமிழர் மரபுகளை எல்லாம் கட்டிக்காக்கும் மூத்த சைவ ஆதினத்தில் ஆகம மரபுகளில் அரசியல் தலையீடுகள் குறுக்கீடுகள் இருக்கலாமா. இது திமுகவின் மதநல்லிணக்கமா, தமிழகத்தில் என்ன மாதிரியான ஆட்சி நடக்கிறது. நம் மாநிலத்தின் ஆளுநரை தாக்க துணிந்து அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அவரின் கட்சித் தொண்டர்கள் தலைமையின் உத்தரவின் பேரில்தான் செயல்பட்டார்களா? இன்று நம் மேதகு ஆளுநருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மாநில அரசே முழு பொறுப்பு. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இந்த ஆட்சியில் எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை இந்த தாக்குதல் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இப்படி தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாமானிய மக்களுக்கும் இந்த ஆட்சியில் எப்படிப்பட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்று அச்சப்பட வேண்டிய நிலையில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.

தொடர்ந்து தமிழக ஆளுநர் மீது ஆளும் கட்சியினரும் அதன் தலைமையும் வெளிப்படுத்தும் வெறுப்பும், எதிர்ப்பும் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேதகு தமிழக ஆளுநர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாஜகவின் சார்பில் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது மாநிலத்தில் வளம் கருதி, மக்களின் நலம் கருதி தமிழக முதல்வர் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன் என அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.