ஸ்டாலின் எழுதிய முதல் கடிதம்...! முதல் பந்திலேயே "சிக்ஸர்" அடித்த பாயின்ட்ஸ்..!
முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த பிறகு நேற்று திமுக தலைவராக ஸ்டாலின் பொறுபேற்றார்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த பிறகு நேற்று திமுக தலைவராக ஸ்டாலின் பொறுபேற்றார்.
இதற்கு முன்னதாக, பொய்யாமொழி அவர்களின் நினைவு தினம் நேற்று என்பதால், சென்னை தி நகரில் உள்ள அன்பில் மகேஷ் வீட்டிற்கு சென்றுவிட்டு பொய்யாமொழி அவர்களுக்கு ,மலர்தூவி வணங்கி விட்டு, அங்கிருந்து அண்ணா அறிவாலயம் புறப்பட்டார்.
பின்னர் நேற்று திமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். தான் தலைவராக பொறுப்பு ஏற்ற உடன், ஒரு தலைவராக தன் தொண்டர்களுக்கு முதல் கடிதத்தை எழுதினார்.
அதில் முக்கிய குறிக்கோளாக "நாம் என்ற உணர்வுடன் இணைந்து பயணிப்போம். இனப்பகையை முறியடிப்போம். தேர்தல் களத்தில் வெற்றி குவிப்போம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார் ஸ்டாலின். மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட மதசார்பற்ற சக்திகளுடன் இணைந்து பாதுகாப்பு வேலிகளை அமைப்போம் என ஸ்டாலின் தன் தொண்டார்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.