அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் ஒவ்வொரு ஊழலுக்கும் வழக்கு தொடருவோம் என்றும், ஊழல்கள் தொடர்பாக, வழக்கு தொடரும் நடவடிக்கை நீடிக்கும் என்றும் தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈழப் பிரச்சனையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தனர்.
இதறகு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கைமுன்னாள்அதிபர்ராஜபக்சே, ஏதோசொல்லிவிட்டார்என, இல்லாதஊருக்குபோகாதவழியைகாட்டும்,கண்டனபொதுக்கூட்டத்தை, அ.தி.மு.க., நடத்தியிருக்கிறது. அதில், ஆபாசநடனம்அரங்கேறியிருக்கிறது. அந்தஅருவருப்பைபார்த்தால், ராஜபக்சேவே சிரித்து, அலட்சியம்செய்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்சொந்தங்களுக்கு, நெடுஞ்சாலைதுறையில்அளித்த, 'டெண்டர்'களில்ஊழல்.துணைமுதலமைச்சர் மீதானசொத்துக்குவிப்புவழக்கு; சுகாதாரஅமைச்சர்,விஜயபாஸ்கர், உள்ளாட்சிதுறைஅமைச்சர், வேலுமணிஎன, ஊழல் பட்டியல்கள் விசாரணைக்குஅணிவகுத்துநிற்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க., ஆட்சியின், ஒவ்வொருஊழல்தொடர்பாகவும்,நீதிமன்றத்திற்கு, தி.மு.க., சென்றுகொண்டுஇருக்கிறது. இனியும் தொடர்ந்து அதிமுகவின் ஊழல்களை அம்பலப்டுத்துவோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கைதமிழர்களின்பெயரால், அரசியல்லாபம்தேடமுயற்சித்து, அதில், தி.மு.க., மீதுஊழல்புகார்சொல்வதும், ஒருகம்பெனிஎனபேசுவதும், நாவடக்கம்இல்லாத, நாலாந்தரசெயல் என மு.க.ஸ்லின் குற்றம்சாட்டியுள்ளார்.
