உயிரோடு இருந்தவரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்த தம்பியால் பரபரப்பு..!
உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரோடு இருந்த அண்ணன் இறந்து விட்டதாக நினைத்து அவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தம்பியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரோடு இருந்த அண்ணன் இறந்து விட்டதாக நினைத்து அவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தம்பியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். 70எழுபது. இவர் உடல்நலமின்றி சாகும் தருவாயில் இருந்ததால், இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவார் என்று நினைத்து அவரது தம்பி குளிர்சாதனப் பெட்டியை வரவழைத்தார். அதன்பின் அவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் இறந்துவிடுவார் என்று நினைத்த தம்பி, ஆனால் பல மணி நேரம் ஆகியும் சரவணன் உயிர் பிரியவில்லை. சிலமணி நேரம் குளிர்சாதனப் பெட்டியை எடுக்க வந்த தொழிலாளர்கள் சரவணன் உயிரோடு குளிர்சாதன பெட்டியில் வைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அவரது தம்பியிடம் போலீசார் நடத்திய விசாரணையில்..'அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால் உயிர் சீக்கிரம் பிரிந்துவிடும் என கருதி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளதாக சொல்லியது போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது.