இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து ஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.இச்சம்பவம் காவல்துறையில் களங்கம் கற்பித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாகை மாவட்டம். மயிலாடுதுறை வில்லியநல்லூரை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணிற்கும் நாகை மாவட்டம் தலைஞாயிறுவைச் சேர்ந்த எஸ்ஐ விவேக் ரவிராஜ் என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.நாட்கள் போக போக காதலாக மாறி தனிமையில் இருக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு இருவரும் உல்லாசமாக இருக்கவே சுபஸ்ரீ கர்ப்பமானார். இந்த செய்தி இரு வீட்டாருக்கும் தெரியவரவே இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எண்ணிய விவேக் ரவிராஜ் , சுபஸ்ரீயிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்வோம் அதனால் கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு டாக்டர் மூலம் கருக்கலைப்பும் செய்துள்ளார்.
