Asianet News TamilAsianet News Tamil

செயல்வீரர்கள் கூட்டமே இந்த போடுன்னா!! தெறிக்க விடும் செந்தில் பாலாஜி... கதிகலங்கி கிடக்கும் அதிமுக கூடாரம்

கொங்கு மண்டலத்தில் தனி சாம்ராஜ்யம்  அமைத்தது இந்த செயல்வீரர்கள் கூட்டத்தின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. செயல்வீரர்கள் கூட்டமே இந்த போடு போடுதுன்னா? மாநாடு நடத்தினர் சொல்லவா வேணும் என பேசும் அளவிற்கு தெறிக்கவிட்டுள்ளார் செந்தில்பாலாஜி.

Senthil Balaji Mass Crowed at Aravakurichi
Author
Chennai, First Published Apr 22, 2019, 7:26 PM IST

கொங்கு மண்டலத்தில் தனி சாம்ராஜ்யம்  அமைத்தது இந்த செயல்வீரர்கள் கூட்டத்தின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. செயல்வீரர்கள் கூட்டமே இந்த போடு போடுதுன்னா? மாநாடு நடத்தினர் சொல்லவா வேணும் என பேசும் அளவிற்கு தெறிக்கவிட்டுள்ளார் செந்தில்பாலாஜி.

கடந்த 10 ஆண்டுகள் கரூர் அதிமுகவை தன கைக்குள்ளேயே வைத்திருந்ததென்றால் அது செந்தில்பாலாஜி தான். தம்பிதுரையை ஜெயிக்கவைத்தது முதற்கொண்டு எல்லாமேவாக இருந்த அவர்,  தினகரன் அணியுடன் இணைந்து, கடைசியில் திமுகவில் இணைத்து தற்போது கரூர் மாவட்ட பொறுப்பாளராக ஆகி இருக்கிறார். 

Senthil Balaji Mass Crowed at Aravakurichi

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த ஒரு சில நாட்களுக்குள் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின்  இந்த அசுர வளர்ச்சி திமுகவினரையே அசர வைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடத்தும் ஒவ்வொரு கூட்டமும், திமுகவின் முக்கிய புள்ளிகளை கதிகலங்க வைத்ததென்றே சொல்லலாம். செந்தில்பாலாஜியின் சமீபத்திய செயல்பாடுகள் தலைமையை மகிழ்வித்திருக்கிறது.

கடந்த அரவக்குறிச்சி தேர்தலி பணம் கொடுக்கப்பட்டதாக நிறுத்தப்பட்டு மீண்டும் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிப்பெற்ற செந்தில்பாலாஜி தான் தற்போது திமுக சார்பில் வேட்பாளர்.  இதனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவை தன் வசப்படுத்தி வைத்திருந்த செந்தில்பாலாஜிக்கு எதிராக யாரை நிறுத்தினாலும் காலி என்பது அதிமுக தலைமைக்கே தெரியும் என்பதால், குழம்பித் தவிக்கும் நிலையில், செந்தில்பாலாஜி நடத்தும் சொல்வீர்கள் கூட்டம் அதிமுகவை கதிகலங்க வைத்துள்ளதாம்.

Senthil Balaji Mass Crowed at Aravakurichi

செந்தில்பாலாஜிக்கு எப்பவுமே லோக்கல் பாலிடிக்ஸ்ல தான் இன்ட்ரஸ்ட்,  அதேபோல தலைமைக்கு டைரக்ட் லிங்க் இருக்கணும்னு நெனைப்பாரு. தலைவர் எம்.பி. தேர்தலில் யாரை  வேட்பாளரை நிறுத்துறாரோ அவரையே வெற்றிபெற வைப்பார். செந்தில் பாலாஜி நினைத்ததெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  அமைச்சராக கூட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

Senthil Balaji Mass Crowed at Aravakurichi

தினகரன் பெரிதாய் நம்பிக்கை வைத்தவர்களில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி. அதுமட்டுமல்ல செந்தில் பாலாஜி என்னுடைய கம்பியூட்டர் என சொல்லும் அளவிற்கு திறமை சாலி, இளைஞர் என்றாலும் கூட மிக தேர்ந்த அரசியல்வாதி அவர். ஜெயலலிதா இருந்த போது சில மூத்த மந்திரிகளுக்கு சிக்கல் வந்தபோது மிக சாதுர்யமாக அதை தீர்த்து வைத்தது செந்தில்தான். அதுமட்டுமல்ல, சைலண்ட்டாக வாயே திறக்காமல் வேலையை முடிப்பார். அப்படிப்பட்ட செந்தில் பாலாஜி இப்போது கொங்கு மண்டலத்தில் தனி சாம்ராஜ்யம்  அமைத்தது இந்த செயல்வீரர்கள் கூட்டத்தின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios