60: 40தான் வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
நிர்வாக ஒதுக்கீட்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேரும் எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் கல்வி உதவித் தொகை வழங்குவதில் கொண்டுவந்த மாற்றத்தை திரும்ப பெற வேண்டுமென கோரி கடிதம் எழுதியுள்ளார்.
கல்வி உதவி தொகையில் மத்திய அரசின் பங்கீடாக 1,803 கோடி வழங்க வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் கல்விக்கு மத்திய மாநில அரசு 60:40 என்கிற விகிதாச்சாரத்திலே தொடர்ந்து அரசின் பங்கீடு வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளது தமிழக அரசு
தமிழகத்தில் சிறுபான்மையினர் அதிக அளவில் உள்ளனர் என்றும் உயர்கல்வி வகுப்புகள் தொடங்கும் நிலையில் இருப்பதால் பிரதமர் உடனடியாக தன் முடிவினை தெரிவிக்க கோரி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.