Asianet News TamilAsianet News Tamil

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் அடித்துக் கொலை... அடுத்த சம்பவத்தை அரங்கேற்றிய சிபிசிஐடி..!

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் மேலும் 5 போலீசாரை சிபிசிஐடி கைது செய்தது.

sathankulam Jayaraj- Pennix beaten up ... CBCID announces next incident
Author
Tamil Nadu, First Published Jul 8, 2020, 10:32 AM IST

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் மேலும் 5 போலீசாரை சிபிசிஐடி கைது செய்தது.

ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. sathankulam Jayaraj- Pennix beaten up ... CBCID announces next incident

சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள என 5 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். sathankulam Jayaraj- Pennix beaten up ... CBCID announces next incidentsathankulam Jayaraj- Pennix beaten up ... CBCID announces next incident

இந்நிலையில், சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதற்கிடையே சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios