சிறையிலும் இம்சை பண்ணும் Mavis Satcom Ltd! ஆக்ரஹாராவில் ஆவணங்களை கைமாற்றும் சசி...
சசிகலா சிறைக்கு சென்றாலும் அங்கேயும் நிம்மதியாக இருக்க முடியவில்லையாம். அவரின் பெயரில் உள்ள பங்குகளை வேறு நபருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கிறார் சசிகலா என்ற பகீர் தகவல் வெளிவந்துள்ளது. எதற்காக இந்த திடீர் மாற்றம்? முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் உற்ற தோழியாக இருந்த சசிகலாவின் பெயரில் ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன என்கிறார்கள். அந்த வகையில் பல நிறுவனங்களில் அவருக்கு பங்குகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Mavis Satcom Ltd நிறுவனத்தில் சசகலாவிற்கு 70-80 சதவிகித பங்குகள் இருக்கிறதாம். இந்த பங்குகளைத்தான் வேறு ஒரு நபரின் பெயருக்கு மாற்ற முயற்சித்து வருகிறாராம் சசிகலா. Mavis Satcom Ltd என்ற இந்த நிறுவனம்தான் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள தனியார் தொலைக்காட்சியை நடத்தி வருகிறதாம். இந்தத் தனியார் தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்ய டெல்லி தரப்பில் ஒருந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையில் இருந்து அந்த தொலைக்காட்சி அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. ‘உடனடியாக உங்கள் சேனலின் ஒளிபரப்பை நிறுத்துங்கள்’ என்று அந்தக் கடிதத்தில் இருந்ததால் அங்குள்ளவர்கள் அதிர்ந்துவிட்டார்கள்.
சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு உத்தரவுக்கு தடை விதித்துள்ளார்கள் நீதிபதிகள்.
இதனால் இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்கள் சசிகலா தரப்பினர். மத்திய அரசு தரப்பில் ஊழல் வழக்குகளில் உள்ளவர்கள் தொலைக்காட்சி நடத்துக்கூடாது என கொள்கை முடிவு எடுத்துள்ளார்களாம். இதனால்தான் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலாவின் பங்குகள் இருக்கும் தனியார் தொலைக்காட்சியின் மீது இந்த நடவடிக்கையாம்.
இதை தொடர்ந்தே மத்திய அரசு அடுத்தகட்டமாக நடவடிக்கை எடுப்பதற்குள் தன் பெயரில் உள்ள பங்குகளை வேறு நபருக்கு மாற்ற முயற்சித்து வருகிறாராம் சசிகலா. அந்த நபர் யாராக இருக்கும் என்பது சசிகலாவிற்கு மட்டும்தான் தெரியும். விரைவில் நமக்கும் தெரியவரும்.