Asianet News TamilAsianet News Tamil

சர்ச்சையில் மீண்டும் சசிகலா புஷ்பா.. அரைகுறை ஆடையுடன் படுக்கையறையில்..? பரபரப்பு புகார் அளித்த இரண்டாவது கணவர்

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருந்து வரும் சசிகலா புஷ்பாவின் மீது அவரது இரண்டாவது கணவர் வழக்கறிஞர் ராமசாமி புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sasikala pushpa second husband complains to his wife
Author
Tamilnádu, First Published Jan 26, 2022, 2:42 PM IST

அதிமுக வின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி ஆக இருந்தவர் சசிகலா புஷ்பா. அப்போது திமுக மாநிலங்களவை எம்.பி ஆக இருந்த திருச்சி சிவாவுக்கும் இவருக்கும் இடையில் என்ன தொடர்பு என்று பல்வேறு விதமான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகள் கிளம்பின. இந்த பிரச்சனை வெடித்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி திருச்சி சிவாவை கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்து மீண்டும் பூதாகரமான சர்ச்சையை கிளப்பி, ஹாட் டாப்பிக்கில் சிக்கினார் சசிகலா புஷ்பா.

Sasikala pushpa second husband complains to his wife

பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது, அதிமுகவில் இருந்த சசிகலா புஷ்பா, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வத்தார். குறிப்பால, மறைந்த முன்னாள் ஜெயலலிதா தம்மை தாக்கியதாக மாநிலங்களவையில் புகார் எழுப்பி அரசியலில் புயலை கிளப்பியவர். தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பல்வேறு அணிகள் மாறிக்கொண்டே இருந்த இவர், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு முயற்சி செய்தார் என்று பேசப்பட்டது. இந்த சம்பவம் அதிமுக கட்சியிலும் அரசியல் தளத்திலும் விவாத பொருளாக மாறி, பரபரப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 

Sasikala pushpa second husband complains to his wife

பின்னர் அதிமுகவிலிருந்து விலகிய இவர், அதிரடியாக பாஜகவில் இணைந்தார். இவர் பாஜகவில் இணைந்த சில நாட்களில் இவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவிக்கு இவர் முயற்சி செய்ததாக தகவல் பரவியது. இவருடைய முதல் கணவன் லிங்கேஸ்வரனிடம் இருந்து பிரிந்த சசிகலா புஷ்பா, இரண்டாவதாக வழக்கறிஞர் ராமசாமி என்பவரை டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.

Sasikala pushpa second husband complains to his wife

இந்நிலையில் தற்போது வரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருந்து வரும் சசிகலா புஷ்பா மீது அவரது இரண்டாவது கணவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரில், ஒரு வழக்கு விசயமாக சசிகலா புஷ்பார் கணவர் ராமசாமி மற்றும்  இவரது மகளுடன் மதுரைக்கு சென்று, மீண்டும் சென்னையில் ஜீவன் பீமா நகரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர்.  அப்பொழுது, வீட்டின் கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்காததால் சசிகலா புஷ்பாவிற்கு போன் அடித்துள்ளார். அந்த நேரத்தில் அமுதா என்ற ஒரு பெண் கசங்கிய ஆடைகளுடன் வந்து கதவை திறந்துள்ளார். யார் என்றே தெரியாத இந்த பெண் நம் வீட்டில் என்ன செய்கிறார் என்று நினைத்து கொண்டே ராமசாமி வீட்டிற்குள் சென்றபோது, வீடு முழுவதும் உண்ட உணவு பொருட்கள் சிதறியும், மதுவின் வாசனையும் அடித்துள்ளது. 

Sasikala pushpa second husband complains to his wife

ஒரு படுக்கை அறையில் சசிகலா புஷ்பா உறங்கிக்கொண்டும், மற்றொரு அறையில் யாரென்று தெரியாத மற்றொரு நபர் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் ராமசாமி தன் செல்போன் மூலம் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, அந்த மர்ம நபர் மற்றும் கதவை திறந்த அமுதா என்ற பெண்ணும் சேர்ந்து அவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இதனால் ,கணவன் என்ற முறையில் எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த மனைவி சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராமசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios