ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என கீதா எனபவர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முதல்வர் ஓபிஎஸ் , சசிகலா உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என அவரது குடும்ப நண்பர் கீதா மனு தாக்கல் செய்துள்ளார். 

ஜெயலலிதா சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி காட்சிகளை அப்பல்லோ வெளியிட வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளது.

அல்லிக்குளம் எழும்பூர் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு இன்று 10.30 மணிக்கு கீதா(61 )என்பவர் ஆஜராகி சசிகலா OPS உட்பட 20 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்தார் . மனுவை ஏற்றுக் கொண்ட நடுவர் இன்னும் சிறிது நேரத்தில் விசாரணை நடத்த உள்ளார் . கீதாவுடன் ஏற்கனவே சசிகலாவுக்கு எதிராக வாட்ஸ் அப்புகளில் வாய்ஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.