சசிகலா என்பவர் யார் ? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார்.

சசிகலா வருகையை ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார், இப்போது சசிகலாவின் அரசியலை அவ்வளவு எளிதாக யாராலும் அலட்சியப்படுத்திவிட முடியாது என்று கூறப்படுகிறது. "சசிகலாவுடன் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கட்சியை விட்டு நீக்கவேண்டும்" என்று அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமீபத்தில் சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. அவர் நூறல்ல... 1000 போன் பேசினாலும் அதிமுகவை அசைக்க எனக்கூறினார். இதுஒருபுறமிருக்க, சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், ’’சசிகலா என்பவர் யார் ? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார்.

 அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக யார் தயவிலும் இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னதாக சமூக வலைத்தளம், மொபைல் வழியாக மிரட்டல் விடுப்பதாக சசிகலா உட்பட 500 பேர் மீது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.