பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு சசிகலா மேற்கொள்ளும் நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் மாறும் என பல திமுக சார்பு அரசியல் விமர்சகர்களும், பத்திரிக்கையாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் சசிகலா வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் ,அவர்கள் திட்டம் போட்டது போல எதுவும் நடக்கவில்லை. சசிகலா மற்றும் தினகரனின் பிளான் flop ஆகிவிட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு சசிகலா மேற்கொள்ளும் நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் மாறும் என பல திமுக சார்பு அரசியல் விமர்சகர்களும், பத்திரிக்கையாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் சசிகலா வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் ,அவர்கள் திட்டம் போட்டது போல எதுவும் நடக்கவில்லை. சசிகலா மற்றும் தினகரனின் பிளான் flop ஆகிவிட்டதாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சசிகலா வெளியே வந்தவுடன் பல அமைச்சர்களும் நிறம் மாறுவார்கள், பயந்து நடுங்குவார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில், அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமியின் அணியிலேயே பலமாக நிற்கின்றனர்.
அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் தொடர்ந்து சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிரான கருத்தை ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையாக முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஓ.எஸ் மணியன் போன்று மன்னார்குடி குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்களும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
ஆட்சியில் தனது ஆளுமையை காட்டிவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியலிலும் தனது சாமர்த்தியத்தை காட்டி அசதி வருவதாக பல அரசியல் நோக்கர்கள்ளும் தெரிவித்து வருகின்றனர்.
சிறையில் இருந்து வந்த முதல் நாள் சசிகலாவிற்கு நல்ல வரவேற்பு ஏற்பாடு செய்யப் பெற்று ,தொண்டர்கள் எங்கள் பக்கன் என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் பிறகு பெரிய அளவில் யாரும் சென்று சசிகலாவின் சந்திக்க வில்லை என்பதே உண்மை. பல அமைச்சர்களும்,எம்.எல்.ஏக்களும்
ஆட்சியில் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனது திறமையை மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்பது இதில் இருந்து புலப்படுகிறது.
