Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸை வீழ்த்த ஆர்எஸ்எஸ் போட்ட திட்டம்: அண்ணா ஹசாரே, கெஜ்ரிவாலை அம்பலப்படுத்திய பிரசாந்த் பூஷன்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அண்ணா ஹசாரேவும், கெஜ்ரிவாலும் நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார்.

RSS plot to overthrow Congress: Anna Hazare, Prashant Bhushan exposing Kejriwal
Author
Chennai, First Published Sep 15, 2020, 3:08 PM IST

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அண்ணா ஹசாரேவும், கெஜ்ரிவாலும் நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார். அப்போராட்டம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் கழித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவரின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

RSS plot to overthrow Congress: Anna Hazare, Prashant Bhushan exposing Kejriwal

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அண்ணா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் ஆதரவளித்து  ஊக்குவிக்கப்பட்ட தாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வராக இருப்பவரும், அன்று ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து  செயல்பட்ட வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் இயல்பை நான் அறிந்து கொள்ளத் தவறி விட்டேன், நான் வாழ்க்கையில் செய்த பெரிய தவறுகள் இவை என்று பிரஷாந்த் பூஷன் தன்னைத் தானே நொந்து கொண்டுள்ளார். 

RSS plot to overthrow Congress: Anna Hazare, Prashant Bhushan exposing Kejriwal

அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்புலமாக இருக்கிறதோ என்ற லேசான சந்தேகம் எனக்கு அப்போதே இருந்தது ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிச்சயமாக அதைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். அந்தப் போராட்டமானது காங்கிரஸ் கட்சியை அதிகாரத்தில் இருந்து இறக்கி, தாங்கள் பதவியில் அமர்வதற்காக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகாவால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலை என்பவரின் நேர்மையின்மை குறித்து மிகவும் தாமதமாகவே தெரிய வந்தது. ஆனால் அதற்குள் அவர் பெரிதாக வளர்ந்து விட்டார். இவர் பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios