Asianet News TamilAsianet News Tamil

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்..!! 29 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 617 பள்ளிகளில் 8,062 மாணவர்களும். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 84 பள்ளிகளில் 873 மாணவர்களும் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Right to Free and Compulsory Education Act,  29 thousand students have applied.
Author
Chennai, First Published Sep 3, 2020, 11:04 AM IST

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் செப்டம்பர் 1 ஆம்  தேதி வரை, சுமார் 29 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகளில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு வகுப்பில் 25 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கைக்கு  rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்  தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 25ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்துடன் மாணவர்களின் புகைப்படம், பிறப்புச்சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் எனில் அதற்கான வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றையும் சேர்த்துதாக்கல் செய்ய வேண்டும். 

Right to Free and Compulsory Education Act,  29 thousand students have applied.

தமிழ்நாட்டில் உள்ள  8,628 நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 1,15,771 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 617 பள்ளிகளில் 8,062 மாணவர்களும். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 84 பள்ளிகளில் 873 மாணவர்களும் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்ற விபரம் மாவட்ட வாரியாக  வெளியிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக செப்டம்பர் 1-ஆம் தேதி வரை 29 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். 

Right to Free and Compulsory Education Act,  29 thousand students have applied.

மாணவர்கள் விண்ணப்பம் செய்யும் பொழுது அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் இடையே ஒரு கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் உள்ளதா என்பதை இணையதளம் காண்பிக்கிறது. எனவே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் பள்ளியில் மட்டுமே அந்த குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்க முடியும், பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் தகுதியான விண்ணப்பங்கள் செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளி கல்வித்துறை இணையதளத்திலும் பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். ஒரு பள்ளியில் உள்ள இடத்திற்கு அதிகமாக மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால், அவர்களில் காலியாக உள்ள இடத்திற்கு குலுக்கல் முறையில் அக்டோபர் 1-ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் அக்டோபர் 3-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios