Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ் மகன் தொகுதியில் மறு வாக்குப்பதிவு... வாக்குச் சாவடிகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ள நிலையில், ஈரோடு, தேனியில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ள 3 சாவடிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Re-vote in Ops son's constituency
Author
Tamil Nadu, First Published May 9, 2019, 1:24 PM IST

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ள நிலையில், ஈரோடு, தேனியில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ள 3 சாவடிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.Re-vote in Ops son's constituency

இதில், தருமபுரி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 10 வாக்குச்சாவடிகளின் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. தேனி, ஈரோடு மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 3 வாக்குச்சாவடிகளின் விவரங்களும் வெளியாகியுள்ளது.Re-vote in Ops son's constituency

அதன்படி, ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில், திருமங்கலம் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 248-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கம்மவர் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 67-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.தேனி நாடாளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios