Asianet News TamilAsianet News Tamil

சாக்கில் பண மூட்டையை வைத்து ஆள் பிடிக்கும் ஓபிஎஸ்..? உண்மை தொண்டனை விலைக்கு வாங்க முடியாது- ஆர்.பி உதயகுமார்

 எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் எங்களை விரும்புகின்றனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார், தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை பாகிஸ்தான் மக்கள் விரும்புகிறார்களா? என கேள்வி எழுப்பியவர், தமிழ்நாட்டை ஆளதகுதி எடப்பாடிக்கு மட்டுமே உண்டு என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 

RB Udayakumar has said that the DMK government has stopped the program of AIADMK regime
Author
First Published Sep 16, 2022, 4:32 PM IST

மின் கட்டண உயர்வு - அதிமுக போராட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை டி.கல்லுப்பட்டியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கிட்டார். இதனை தொடர்ந்து ஆர்பாட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார்,  மின் கட்டணத்தை உயர்த்தி திமுகஅரசு சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது, பஞ்சாப் மாநிலத்தில் 15,000கோடியளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது, உத்தப்பிரதேசத்தில் 22,000 கோடி அளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது ,ஆனால் கடந்த 8  ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, தற்போது திமுக அரசு மானியம் வழங்காமல் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். சட்டமன்றத் தேர்தலில் இரட்டைஇலைக்குதான் வாக்களித்தோம் எடப்பாடியார் முதலமைச்சர் வரவேண்டும் வரவேண்டும் என்று தான் நினைத்தோம் என்று மக்கள் கூறுவதாக தெரிவித்தார். 

தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள்..? யார்? யார்? தெரியுமா..? திமுக அரசை இறங்கி அடித்த இபிஎஸ்

RB Udayakumar has said that the DMK government has stopped the program of AIADMK regime

முதலமைச்சர் தொடர்ந்து பத்து நாட்களாக மதுரைக்கு வருகிறார் அண்ணன் கோட்டையை பிடித்து விடுவோமா என்று நினைக்கிறார், தென் மாவட்டத்தை விட்டு விடுங்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள், தென் மண்டல சிறு குறு தொழில் நிறுவனங்களில் மாநாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது ,ஆனால் இன்றைக்கு தமிழகத்தில்  2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன, 20 லட்சம் வணிக நிறுவனங்கள்  இந்த மின்சார கட்டண உயர்வால்  பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவித்தார்.  தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர், கல்வி கடன் ரத்து செய்யவில்லை, இரண்டு சக்கர வாகன திட்டத்தை நிறுத்தி விட்டனர்,இப்போது 52% மின் உயர்வு, 150% சொத்து உயர்வு, கடந்த மாதத்தில் மட்டும் 133 கொலைகள் இன்றைக்கு காவல்துறை ஏவல் துறையாக மாறி உள்ளது, குற்றம் செய்பவர்களை விட்டுவிட்டு அதிமுகவினரை  பிடிப்பதிலே போலீசிற்கு குறியாக உள்ளது, ஏனென்றால் திமுகவிற்கு நாங்கள் சிம்ம சொப்பனமாக இருக்கிறோம்.

திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறை எது..? ரூ. 1 கோடி பரிசு...ஸ்டாலினை அதிரவைத்த மாஜி அமைச்சரின் கணவர்

RB Udayakumar has said that the DMK government has stopped the program of AIADMK regime

 எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் எங்களை விரும்புகின்றனர் என்று முதலமைச்சர் கூறுகிறார், தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை பாகிஸ்தான் மக்கள் விரும்புகிறார்களா? எற கேள்வி எழுப்பியவர்,  தமிழ்நாட்டை ஆளதகுதி எடப்பாடிக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்றிய பிறகு எந்த நாட்டுக்கு முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கப் போகிறார், கருணாநிதி தரம் பிடித்து வந்த ஸ்டாலின்  மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற பகல் கனவு பலிக்காது, மின்கட்டணம் உயரால் மக்கள் கொந்தளித்து உள்ளனர் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியாரரை முதலமைச்சராக்க அதிமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று கூறினார்.திருவிழாவில் பஞ்சுமிட்டாய் மற்றும் பலூன் விற்பவர்களை நம்பி குழந்தைகள் பெற்றோரை விட்டு சென்றுவிடும் அப்புறம் தான் தெரியும் அவர்கள் காசு கொடுத்தால் தான் கொடுப்பார்கள் என அத போலத்தான் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனின் நிலை இருப்பதாக கூறினார். தற்போது சாக்கில் பணம் மூட்டையை வைத்துக் கொண்டு ஆள் பிடிக்கும் வேலையை ஓ.பன்னீர் செல்வம் செய்கிறார் ,எங்களை விலை பேச முடியவில்லை உண்மையான தொண்டர்களை அவரால் விலைக்கு வாங்க முடியாது. என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்,

இதையும் படியுங்கள்

நீங்க கால்வச்ச கட்சியெல்லாம் ஒன்னும் இல்லாம போச்சு.. ஆளவிடு சாமி,பண்ருட்டியாரை ரோட்டில் போட்டு புரட்டிய இபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios