கொடநாடு பிரச்சனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் கொலை, கொள்ளை நடந்ததாக டெகல்கா நிறுவனம் ஆவணப்படம் வெளியிட்டுள்ள நிலையில் , நம்ம இபிஎஸ் ஒரு ஈயைகூட அடிக்க மாட்டாடே அவர் மேல இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்துவது ஏன் என அமைச்சர் ராஜேந்தி பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2017ம்ஆண்டு, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடுஎஸ்டேட்டில்நடந்தகாவலாளியின் கொலைமற்றும் கொள்ளைசம்பவங்கள்,அதைத்தொடர்ந்துமுக்கியகுற்றவாளிகள் இறந்தது, என அனைத்துக்கும்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியும், சசிகலாவும்தான்காரணம்எனதெஹல்காசெய்திநிறுவனத்தின்முன்னாள்ஆசிரியர்சாமுவேல்மாத்தியூஸ் ஆவணப்படம்ஒன்றைவெளியிட்டார். இந்தஆவணப்படம்தமிழகஅரசியலில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியது.

இந்தஆவணப்படத்தைவைத்துமுதல்வர்எடப்பாடிபழனிசாமியை, எதிர்க்கட்சிகள்விமர்சனம்செய்துவருகின்றன. ஆனால் இதற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என முதலமைச்சர் மறுத்துள்ளார்.

மேலும் சாமுவேல்மாத்தியூஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்செய்தியாளர்களிடம் பேசியபால்வளத்துறைஅமைச்சர்ராஜேந்திரபாலாஜி, முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிஒருஈயைகூடஅடிக்கமாட்டார்எனகூறியுள்ளார். அவர் மீது இப்படி பழியை சுமத்துவது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிதலைமையிலானநல்லாட்சியைகலைக்கசிலர் திட்டமிட்டே இதைசெய்துள்ளனர். முதலமைச்சரை எதிர்க்க யாருக்கும்இங்கு திராணிகிடையாது. திராணி, தெம்புஇல்லாதவர்கள், இதுபோன்றபொய் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். ஈயைகூடஅடிக்கமாட்டார்எடப்பாடிபழனிசாமி. அவராகொலைசெய்யபோகிறார்?" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
