கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது. இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்கிவருகிறது. மக்கள் பொதுஇடங்களுக்கு வராதபடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸில் அச்சுறுத்தல் குறித்து ஒன்றை மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்ட தகவல் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகிவருகிறது. 
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது. இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்கிவருகிறது. மக்கள் பொதுஇடங்களுக்கு வராதபடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. டிசம்பர், ஜனவரியிலேயே சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்திலிருந்த நிலையில், இந்தியாவில் முன்கூட்டியே சமூக விலகலைக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒன்றரை மாதங்களுக்கு முன்னால், பிப்ரவரி 12 அன்று கொரோனா வைரஸ் தொடர்பாக எச்சரித்து வெளியிட்ட ட்விட்டர் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. அன்றைய தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கொரோனா வைரஸ் நமது மக்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தலை அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது என்னுடைய உணர்வு. சரியான நேர நடவடிக்கையும் முக்கியமானது.” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.