Asianet News TamilAsianet News Tamil

சமக தொண்டர்கள் - போலீஸ் இடையே திடீர் தள்ளுமுள்ளு : சமாதானப்படுத்திய சரத்குமார்

quarrel between police and sarathkumar cadres
quarrel between-police-and-sarathkumar-cadres
Author
First Published Apr 7, 2017, 3:38 PM IST


சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 8 மணிமுதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சேப்பாக்கம் எம்எல்ஏ-க்கள் விடுதி மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி  வீடு ஆகிய இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணியிலிருந்து  அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். 

quarrel between-police-and-sarathkumar-cadres

இந்நிலையில், கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள், வீட்டின் முன் குவிந்துள்ளனர்.

quarrel between-police-and-sarathkumar-cadres

அப்போது வீட்டுக்குள்ளும் வெளியேயும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டின் வெளியில் கூடியிருந்த சமக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து சரத்குமார் சமாதான முயற்சியில் ஈடுபட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios