Asianet News TamilAsianet News Tamil

5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வுகள்..? செங்கோட்டையன் எடுக்கும் அதிரடி முடிவு..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

Public exam for classes 5 and 8 ..? Action to take the sengottaiyan
Author
Tamil Nadu, First Published Feb 9, 2019, 11:50 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Public exam for classes 5 and 8 ..? Action to take the sengottaiyan

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப் பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும். பயோமெட்ரிக் முறையிலான மாணவர்கள் வருகைப் பதிவேட்டு முறை அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும். Public exam for classes 5 and 8 ..? Action to take the sengottaiyan

மார்ச் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் 2017ல் இருந்து 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அப்போது 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவர்கள் கடுமையாக உழைக்கும் நிலையில், 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தினால் மாணவர்கள், பெற்றோர் பாதிக்கப்படுவர். Public exam for classes 5 and 8 ..? Action to take the sengottaiyan

இதனால் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுக்காக கடினமாக உழைக்க வேண்டியது வரும். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகும் என எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தினால் எதிர்ப்புகள் கிளம்பும் நிலை உருவாகலாம் எனக் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios