அப்துல் கலாமின் 85 வது பிறந்த தினம் : பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து
இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் அவுல் பக்கீர் ஜெயினுலாவுதீன் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். முன்னாள் ஜனாதிபதி, மறைந்த, ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த நாளான, இன்று, இளைஞர் எழுச்சி நாளாக, தமிழக அரசு கொண்டாடுகிறது;
அப்துல்கலாமின் 85வது பிறந்த நாளையொட்டி , பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ஒவ்வொரு இந்தியரின் எண்ணங்களையும் கவர்ந்தவர் அப்துல் கலாம் என புகழாரம் சூட்டியுள்ளார்.