"மக்கள் விரும்பவில்லையென்றால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்காது" - பொன்னார் உறுதி
மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்
"எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு தமிழகத்தில் திணிக்காது. எந்த திட்டம் கொண்டுவந்தாலும் எதிர்த்தால், அதன் விளைவு தான் என்ன? ஆழ்ந்து சிந்திக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசின் திட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. தமிழர்களை முட்டாள்களாக்கும் செயல்களில் தமிழகத்தின் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.