யார் மீதும் யார் வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற நிலையை மீ டூ மூவ்மெண்ட் கொண்டுவந்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரைத்துறைமற்றும்பல்வேறு தொழில்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள், தங்களுக்குநேர்ந்தபாலியல்ரீதியானவிஷயங்களை, மீடூஎன்ற, ஹேஸ்டேக்வாயிலாக, வெளிப்படையாகதெரிவித்துவருகின்றனர். நாடுமுழுவதும்சர்ச்சையைஏற்படுத்தியுள்ள, இந்தவிஷயம்குறித்துவிசாரிக்க, மத்தியஅரசுகுழுஅமைத்துள்ளது. தமிழ்திரையுலகிலும், மூவர்குழுஅமைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், 'விளம்பரத்திற்காகவும், பணம்பறிக்கவும், மீடூவைபயன்படுத்தவேண்டாம்' என, நடிகையர், காஜல்அகர்வால், சமந்தாஉள்ளிட்டபலர்கூறியுள்ளனர். இந்தி திரையுலகில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கொடுத்த செக்ஸ் புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழகத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய குற்றச்சாட்டு ட்ரெண்டங்கில் உள்ளது. தமிழகத்தில் ஊடகங்கள், வலைதளங்கள் என அனைத்திலும் வைரமுத்து-சின்மயி விஷயம் பேசப்பட்டு வருகிறது. சின்மயி தவிர வேறு சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , யார் மீதும் யார் வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற நிலையை மீ டூ மூவ்மெண்ட் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.
ஆதாரம் இலலாமல் போகிற போக்கில் குற்றச்சாட்டை சுமத்துவது என்பது தவறு என்றும், இது போன்ற பழியைச் சுமந்து கொண்டு இருப்பது மிகவும் கஷ்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பின் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தால் அவரது வாழ்க்கையே அர்த்தமற்றதாக போய் விடும் என குற்றம்சாட்டுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் பொன், ராதாகிருஷ்ணன் என குறிப்பிட்டுள்ளார்
