Asianet News TamilAsianet News Tamil

ஆந்திராவில் அரசியல் புயல்.! தேர்தல் ஆணையரும், அரசியல் கட்சியினரும் ரகசிய சந்திப்பு.! அம்பலபடுத்தும் சிசிடிவி..

ஆந்திர மாநிலத்தில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை உருவாகி வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் இரண்டு மூத்த அரசியல்வாதிகளை சந்தித்ததாகக் கூறப்படும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Political storm in Andhra Pradesh! Secret meeting of Elections Commissioner and political parties! Exposing CCTV
Author
Andhra Pradesh, First Published Jun 24, 2020, 8:08 AM IST


ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் தெலுங்குதேசம் கட்சியின் முக்கிய தலைவர்களை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சந்திக்கும் சிசிடிவி கேமிரா பதிவு தற்போது வெளியாகி இருக்கிறது. இது ஆந்திர அரசியலில் அடுத்த புயலை கிளப்பியிருக்கிறது.

Political storm in Andhra Pradesh! Secret meeting of Elections Commissioner and political parties! Exposing CCTV

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வருகிறார். இவர் முதல்வராக வந்த பிறகு ஆந்திராவில் பல்வேறு முன்மாதிரியான அதிரடி திட்டங்களை அறிவித்து அங்கே அசத்தி வருகிறார். இளம் முதல்வராக இருந்தாலும் தொலைநோக்கு பார்வை மற்றும் அடித்தட்டு மக்களுக்கான முதல்வராக விளங்குகிறார் ஜெகன்மோகன்.

ஆந்திர மாநிலத்தில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை உருவாகி வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் இரண்டு மூத்த அரசியல்வாதிகளை சந்தித்ததாகக் கூறப்படும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இந்த விடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தேர்தல் நடந்து முடிந்து  வருடங்கள் உருண்டோடிய பிறகு இந்த வீடியோ வெளியாகி இருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. 

Political storm in Andhra Pradesh! Secret meeting of Elections Commissioner and political parties! Exposing CCTV

 வெளியிடப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள், மாநில தேர்தல் ஆணையர் " நிமகட்டா பிரசாத்" இரண்டு அரசியல்வாதிகளுக்குப் பிறகு ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைவதைக் காட்டுகிறது. இந்த காட்சிகள் மூன்று பேரும் பின்னர் வளாகத்தில் ஒரு அறைக்குள் நுழைந்து வெளியேறுவதையும் காட்டுகிறது.கேள்விக்குரிய அரசியல்வாதிகள் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி. ஒய் சுஜனா சவுத்ரி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ கே ஸ்ரீனிவாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது..இந்த காட்சிகள் ஜூன் 13 ஆம் தேதி எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியுடன் சட்டப் போரில் ஈடுபட்டுள்ளதால் அரசியல்வாதிகளுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையருக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு புயலை ஏற்படுத்தி இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios