கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்த போலீஸ்கார கணவனை பிடித்து செருப்பால் அடித்து போலீசில், மனைவி ஒப்படைத்த காட்சிகள் வைரலாகி வருகிறது. 

கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்த போலீஸ்கார கணவனை பிடித்து செருப்பால் அடித்து போலீசில், மனைவி ஒப்படைத்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்ட தலைநகர் பத்ராச்சலம் நகரில் ஆயுதப்படை போலீஸாக பணியில் இருப்பவர் சுபாஷ். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு உறவினர் வீட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சுபாஷுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தனியார் லாட்ஜ் ஒன்றில் அந்த பெண்ணுடன் கணவர் சுபாஷ் உல்லாசமாக இருக்கும் தகவல் கிடைத்ததும் உடனே போலீசாருடன் அங்கு சென்ற சுபாஷ் மனைவி இரண்டு பேரையும் பிடித்து போலீஸ் உதவியுடன் செருப்பு, கட்டைகள் ஆகியவற்றால் அடித்து கொண்டே சாலையில் அழைத்து சென்று காவல் நிலையத்தில் இரண்டு பேரையும் ஒப்படைத்தார்.தற்போது காவலர் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.