இலங்கைக்கு துணையாக பாகிஸ்தான் வந்தால்...!! ஈழத்தமிழர்களுக்காக இந்தியா வர வேண்டும். கர்ஜித்த அன்புமணி...!!
அவர்களுக்கு இன்னும் நிலம் ஒப்படைக்கப்படவில்லை . இந்நிலையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு அங்கு மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன .
போர்க்குற்றவாளிகளை காக்க இலங்கை அரசு செய்யும் சதியில் இருந்து ஈழத்தமிழர்களை காத்து இந்தியா நீதி வழங்குமா என பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது . ஆனாலும் இன்னும் தமிழர்களின் நிலப்பரப்பில் இலங்கையின் சிங்களப்படைகள் விளக்கப்படவில்லை . மீண்டும் ஈழத்தமிழர்களும் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு இன்னும் நிலம் ஒப்படைக்கப்படவில்லை . இந்நிலையில் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு அங்கு மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன .
இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது . ஐநா மனித உரிமைகள் ஆணையர் இதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் . இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் இன்னும் அதிகரிக்குமே தவிர நீதி நிலைநாட்டப்படாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை . இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளது . ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளிகள் தப்பித்து விடாமல் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதேபோல் இலங்கை போர்ப்படைத் தளபதி ஷவேந்திர சில்வா ஒரு போர்க்குற்றவாளி என கூறி அமெரிக்காவில் அனுமதிக்க மறுத்துள்ளது . அதாவது ஈழத் தமிழர்களுக்கு நிதி பெற்றுத் தருவதில் தங்களுக்குள் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது .
அதேபோல் இந்தியாவும் ஈழத் தமிழர்களின் மீதான அக்கறையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது . போர்க்குற்ற விசாரணையில் இருந்து வெளியேறத் துடிக்கும் இலங்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதுடன் போர்க்குற்ற விசாரணையை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் . அதேபோல் ஐநா மனித உரிமை பேரவையில் தீர்மானத்தை முடித்து வைக்க வேண்டும் என புதிய தீர்மானத்தை பாகிஸ்தான் உதவியுடன் இலங்கை கொண்டுவர முயற்சி செய்தால் இந்தியா அதற்கு எதிராக வாக்களித்து அதை முறியடிக்க வேண்டும் என அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .