Asianet News TamilAsianet News Tamil

பாமக.. இதோடு நிறுத்திக்க .. என்ன? சூர்யாவை மிரட்டி பார்க்கிறீர்களா.?? பயங்கரமா எச்சரித்த கம்யூனிஸ்ட்.

சூர்யா பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தத் திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பாமகவினர் மிரட்டுவது கலைச் சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானது. 

PMK stop with this .. what? Are you intimidating Surya. ?? communist Party Terriblely warned .
Author
Chennai, First Published Mar 11, 2022, 9:17 AM IST

நடிகர் சூர்யாவை மிரட்டும் போக்கை பாமகவினர் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் ஜனநாயக சக்திகளை திரட்டி வலுவான போராட்டத்தில் இறங்க வேண்டி வரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி வலியுறுத்தியுள்ளது. 

பாமகவினர் அட்ராசிட்டி: 

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காததால் அவர் நடத்தி வெளியாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாமகவினர் வலுவாக உள்ள மாவட்டங்களில் அத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆங்காங்கே திரையரங்குகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடலூர், செஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் திரைப்படம் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை காண வந்தவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: சென்னையில் அதிர்ச்சி.. திருமணமான 7 நாளில் புதுப்பெண் திடீர் தற்கொலை.. அதிரவைக்கும் காரணம்..!

PMK stop with this .. what? Are you intimidating Surya. ?? communist Party Terriblely warned .

இதேபோல் செஞ்சியில் மட்டும் ஒரு திரையரங்கில் பாமகவினர் வேண்டுகோளுக்கிணங்க படம் திரையிடப்படவில்லை. அதேபோல புதுச்சேரியில் கிராமப் பகுதிகளில் திரையரங்குகளில் பாமக எதிர்பால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. கடலூரில் ஒரு திரையரங்கில் பாமகவினர் நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர் இதனால்  அங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது நடிகர் சூர்யா பொது மன்னிப்பு கேட்கும் வரை இத்திரைப்படத்தை அனுமதிக்க மாட்டோம் என பாமகவினர் திரையரங்கு உரிமையாளர்களை சந்தித்து மனு கொடுத்து வருகின்றனர். இதனால் எதர்க்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே பாமகவினர் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். 

சூர்யாவை மிரட்டிபார்க்கிறீர்களா..??

இந்நிலையில் நடிகர் சூர்யா திரைப்படத்தை திரையிடக்கூடாது என மிரட்டுவதா?என பாமக-வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் பின்வருமாறு:- திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள "எதற்கும் துணிந்தவன்" என்ற திரைப்படம் 10.3.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: நான் வளர ரஜினி காரணமில்லை..தனுஷ் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்

இந்த நிலையில் பாமக-வைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களைச் சந்தித்து நடிகர் சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தை திரையிடக்கூடாது என கடிதம் கொடுத்து மிரட்டி வருகின்றனர்.நடிகர் சூர்யா ஜெய்பீம் என்ற சிறந்த திரைப்படத்தில் நடித்ததோடு அந்தப் படத்தையும் தயாரித்து வெளியிட்டிருந்தார். இந்தப் படம் வெளியானபோது பாமகவினர் பல்வேறு வகையான மிரட்டல்களை விடுத்தனர். எந்தவொரு தனிப்பட்ட பிரிவினரையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லையென படத்தின் இயக்குநர் தெளிவுபடுத்திவிட்டார். நடிகர் சூர்யாவும் உரிய விளக்கமளித்தார்.

PMK stop with this .. what? Are you intimidating Surya. ?? communist Party Terriblely warned .

ஆனாலும், சூர்யா பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தத் திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என பாமகவினர் மிரட்டுவது கலைச் சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானது. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நோக்கமுடையது. ஜெய்பீம் திரைப்படக் கலைஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு விழா நடத்தி ஊக்குவித்தது. இத்தகைய திரைப்படங்கள் மென்மேலும் வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.

PMK stop with this .. what? Are you intimidating Surya. ?? communist Party Terriblely warned .

பாமகவே நிறுத்திக்கொள்..

இந்நிலையில், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செயலில் ஈடுபடுவதை பாமக நிறுத்திக் கொள்ள வேண்டும். பாமகவின் இச்செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவாக கண்டன குரலெழுப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.மேலும் நடிகர் சூர்யாவின் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios