அதிகாரப் பதவி மட்டுமல்ல.... அதனால் கிடைக்கும் வசதிகளையும் கூட நான் அனுபவிக்க மாட்டேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மலரும் நினைவுகளை பதிவு ஒன்றின் மூலமாக வெளிப்படுத்தி உள்ளார்.
சென்னை: அதிகாரப் பதவி மட்டுமல்ல.... அதனால் கிடைக்கும் வசதிகளையும் கூட நான் அனுபவிக்க மாட்டேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மலரும் நினைவுகளை பதிவு ஒன்றின் மூலமாக வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளில் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் மிகுந்த ஆக்டிவ்வாக இருப்பவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள், அறிவிப்புகள், செயல்பாடுகள் பற்றி பெருமளவு கருத்துகளையோ, விமர்சனங்களையோ முன் வைத்து விடுவோர்.
இந் நிலையில் பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ள பதிவு தொண்டர்கள் மத்தியில் ஏகத்துக்கும் கொண்டாடப்படுகிறது. அந்த முக நூல் பதிவில் டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதாவது:

அமைச்சர்அதிகாரம்மட்டுமல்ல.... அதன்
வசதிகள்கூடஎனைநெருங்கக்கூடாது!
(பழையசெய்திதான் - இன்றையஇளைஞர்கள்தெரிந்துகொள்வதற்காக)
அது 2003-ஆம்ஆண்டுஎன்றுநினைவு...
தில்லியில்நடைபெற்றபல்வேறுநிகழ்ச்சிகளில்கலந்துகொள்வதற்காகசென்றிருந்தேன். அங்குள்ளபணிகள்முடிவடைந்தபின்னர்அடுத்தநாள்கோவையில்பா.ம.க. நிகழ்ச்சிகள்சிலவற்றில்கலந்துகொள்ளவேண்டும்.
கோவைக்குநேரடிவிமானம்இல்லாதநிலையில், பெங்களூர்நகருக்குவிமானத்தில்சென்று, அங்கிருந்துதொடர்வண்டிமூலம்பயணம்செய்யதிட்டமிட்டோம். அதன்படிதில்லியிலிருந்துபெங்களூர்சென்றோம்.
என்னுடன்அப்போதையதொடர்வண்டித்துறைஇணையமைச்சர்ஏ.கே.மூர்த்தியும்பயணம்செய்தார். பெங்களூர்வந்தடைந்தநாங்கள்அங்கிருந்துகோவைக்குதொடர்வண்டியில்புறப்பட்டோம். ஏ.கே.மூர்த்திதொடர்வண்டித்துறைஇணையமைச்சர்என்பதால்அவருக்குஅனைத்துவசதிகளுடன்கூடியதனிப்பெட்டிஒதுக்கப்பட்டிருந்தது. நான்எனக்குஏ.சி. இரண்டாம்வகுப்புமுன்பதிவுசெய்துஇருந்தேன்.

பெங்களூர்தொடர்வண்டிநிலையத்தில்ஏ.கே.மூர்த்தியைவரவேற்றுவழியனுப்பிவைக்கதொடர்வண்டித்துறைஅதிகாரிகள்திரண்டுவந்திருந்தனர். தொடர்வண்டிபுறப்படுவதற்குசிறிதுநேரம்முன்புவரையிலும்தனதுபெட்டிக்குசெல்லாதஏ.கே.மூர்த்தி, ‘‘ என்னைஅமைச்சராக்கிஅழகுபார்த்ததுநீங்கள்தான். அதனால்நீங்களும்என்னுடன்தனிப்பெட்டியில்பயணிக்கவேண்டும்’’ என்றுமன்றாடினார்.
ஆனால், அதைஏற்கநான்மறுத்துவிட்டேன். ‘‘ தொடர்வண்டித்துறைஇணையமைச்சர்என்றமுறையில்உனக்காகஅந்ததனிப்பெட்டிஒதுக்கப்பட்டுள்ளது. எந்தபதவியிலும்இல்லாதநான்அதில்பயணம்செய்வதுமுறையல்ல. எந்தஅதிகாரபதவியையும்வகிப்பதில்லைஎனநான்உறுதிஏற்றுள்ளேன். அதிகாரப்பதவிமட்டுமல்ல.... அதனால்கிடைக்கும்வசதிகளையும்கூடநான்அனுபவிக்கமாட்டேன்’’ என்றுதிட்டவட்டமாககூறிவிட்டுஎனக்கானஇரண்டாம்வகுப்புஇருக்கையில்பயணித்தேன்.
வேறுவழியின்றிஎன்தொண்டன்ஏ.கே. மூர்த்திஅமைச்சருக்கானதனிப்பெட்டியில்பயணித்தார். தனதுமகனின்உயர்வைதாய்எப்படிரசிப்பாளோ, அதேமகிழ்ச்சியுடன்என்னால்உயர்த்திவைக்கப்பட்டஎனதுதொண்டனின்பயணத்தைரசித்தபடிநான்எனதுபயணத்தைத்தொடர்ந்தேன்என்று டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.
