Asianet News TamilAsianet News Tamil

இப்போதாவது இந்த மதுக்கடைகளை மூடுங்க..!! நேரம் பார்த்து அரசுக்கு நெருக்கடி கொடுத்த ராமதாஸ்..!!

மதுக்கடைகள் கொரோனா  வைரசை பரப்பும் மையங்களாக மாறிவிட்டது ஆகவே  மனிதப் பேரழிவைத் தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் . 
 

pmk founder ramadoss demand to shouter-down tasmac for control corona spread
Author
Chennai, First Published Mar 20, 2020, 5:21 PM IST

கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார் . கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறினார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது .  இதுவரையில் இந்த வைரசுக்கு உலக அளவில் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

pmk founder ramadoss demand to shouter-down tasmac for control corona spread

இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரசுக்கு 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது . இந்நிலையில்  இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.   இந்நிலையில் வணிக வளாகங்கள் ,  திரையரங்குகள் பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் இது  குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழிப்புணர்வு பரப்புரைகளையும் கடந்து மதுக்கடைகளில் கூட்டம்  வழிகிறது .  மதுக்கடைகள் கொரோனா வைரசை பரப்பும் மையங்களாக மாறிவிட்டது ஆகவே  மனிதப் பேரழிவைத் தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் . 

pmk founder ramadoss demand to shouter-down tasmac for control corona spread

கொரோனா பரவலை தடுக்க பிரதமர் அறிவித்துள்ள ஒருநாள் மக்கள் ஊரடங்கு வரவேற்கத்தக்க நடவடிக்கை .  அவரது அறிவிப்பை மதித்து தனித்து இருப்போம் விழித்திருப்போம்...  அதையே அடுத்த மூன்று வாரங்களுக்கு வாடிக்கையாக மாற்றிக் கொள்ள முயலுவோம் .  மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பன்னாட்டு நிறுவனங்கள் ,  தொழில் வணிக அமைப்புகள் , தொழிலதிபர்கள் ,  வசதிபடைத்தவர்கள் ,  தாராளமாக நன்கொடை வழங்கி உதவிட வேண்டும் ,  இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios