இப்போதாவது இந்த மதுக்கடைகளை மூடுங்க..!! நேரம் பார்த்து அரசுக்கு நெருக்கடி கொடுத்த ராமதாஸ்..!!
மதுக்கடைகள் கொரோனா வைரசை பரப்பும் மையங்களாக மாறிவிட்டது ஆகவே மனிதப் பேரழிவைத் தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் .
கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார் . கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறினார் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது . இதுவரையில் இந்த வைரசுக்கு உலக அளவில் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர் . சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரசுக்கு 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது . இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வணிக வளாகங்கள் , திரையரங்குகள் பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழிப்புணர்வு பரப்புரைகளையும் கடந்து மதுக்கடைகளில் கூட்டம் வழிகிறது . மதுக்கடைகள் கொரோனா வைரசை பரப்பும் மையங்களாக மாறிவிட்டது ஆகவே மனிதப் பேரழிவைத் தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் .
கொரோனா பரவலை தடுக்க பிரதமர் அறிவித்துள்ள ஒருநாள் மக்கள் ஊரடங்கு வரவேற்கத்தக்க நடவடிக்கை . அவரது அறிவிப்பை மதித்து தனித்து இருப்போம் விழித்திருப்போம்... அதையே அடுத்த மூன்று வாரங்களுக்கு வாடிக்கையாக மாற்றிக் கொள்ள முயலுவோம் . மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பன்னாட்டு நிறுவனங்கள் , தொழில் வணிக அமைப்புகள் , தொழிலதிபர்கள் , வசதிபடைத்தவர்கள் , தாராளமாக நன்கொடை வழங்கி உதவிட வேண்டும் , இவ்வாறு அவர் கூறியுள்ளார்.