Asianet News TamilAsianet News Tamil

வெளியானது புகைப்படம்... ரஜினி ரசிகர்கள் உற்சாகம்... இப்படியொரு எனர்ஜியா..?

கடவுளுக்கு முன்பு அமர்ந்து தியானம் பண்ணும்போது ஒரு பாசிட்டிவ் ஆன எண்ணம் வரும் அல்லவா, அப்படி இருந்தது. தன்னிலை மறந்துவிட்டேன். 

Photo released ... Rajini fans are excited ... Is there such an energy ..?
Author
Tamil Nadu, First Published Sep 19, 2020, 3:53 PM IST

சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான முரளிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சமயத்தில் அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்தது.Photo released ... Rajini fans are excited ... Is there such an energy ..?

தாம் இனிமேல் பிழைக்க மாட்டோம் என நினைத்த முரளி, தனது ட்விட்டர் பதிவில், "தலைவா, என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவராகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடை போட்டு, அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கிக் கொடு. உங்களை அரியணையில் ஏற்றப் பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த செய்தியை ரஜினிக்கு நெருக்கமானவர்கள் சூப்பர் ஸ்டாரிடம் எடுத்துச் செல்ல,  உடனடியாக முரளிக்கு ரஜினி ஆடியோ ஒன்றை அனுப்பி இருந்தார். 
ரஜினிகாந்த் பேசியது குறித்து மருத்துவமனையில் இருக்கும் முரளி தெரிவிக்கும் போது, "எனது பெயர் முரளி. மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். மனைவியின் பெயர் ப்ரியா, தர்ஷன் மற்றும் தருண் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்த என் பெற்றோர் இரண்டு மாதத்துக்கு முன்பு தான் காலமானார்கள். இதில் அப்பா கொரோனா தொற்று பாதிப்பால் மறைந்தார். Photo released ... Rajini fans are excited ... Is there such an energy ..?

எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து நான் ரஜினி ரசிகன்தான். தலைவர் ரஜினி படங்கள் வெளியான தினத்தன்று சென்னையில் இருப்பேன். அங்குதான் கொண்டாட்டம் களைகட்டும். இப்போதுவரை ஒரு படத்தையும் முதல் நாள் தவறவிட்டதில்லை. சில நாட்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா அறிகுறி தெரிந்தது. உடனடியாகப் பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது நடந்த பரிசோதனையில் எனக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல்நிலையும் மிகவும் மோசமானது.இனிமேல் பிழைக்கவே மாட்டோம் என்று நினைத்துதான் தலைவர் ரஜினிக்காக அந்த ட்வீட்டை பதிவிட்டேன்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி தலைவர் காதுக்குச் சென்று உடனடியாக எனக்காக ஆடியோ வெளியிட்டுள்ளார்.அவருடைய ஆடியோவைக் கேட்ட சிறிது நேரத்தில் எனது அடுத்த கொரோனா தொற்று ரிசல்ட் வந்தது. அது நெகட்டிவ்.தலைவர் ஆடியோ கேட்டவுடனே என்னை நான் மறந்துவிட்டேன். அதுவொரு பாசிட்டிவ் ஆன எண்ணத்தை உருவாக்கியது. கடவுளுக்கு முன்பு அமர்ந்து தியானம் பண்ணும்போது ஒரு பாசிட்டிவ் ஆன எண்ணம் வரும் அல்லவா, அப்படி இருந்தது. தன்னிலை மறந்துவிட்டேன். தலைவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. ஆடியோ வெளியிட்டு, வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். கண்டிப்பாகப் போவேன்" என உற்சாகத்துடன் தெரிவித்திருந்தார். Photo released ... Rajini fans are excited ... Is there such an energy ..?

இந்நிலையில் முரளி பூரண குணம் அடைந்து விட்டார் அவர் கையில் பாபா முத்திரையுடன் உற்சாகத்துடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களிடையே வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios