Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அம்மா அரசு... பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்..!

பெண்களை பின் தொடர்வோருக்கான தண்டனையை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளான உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Penalty for dowry torture increased to 10 years...edappadi palanisamy
Author
Chennai, First Published Sep 16, 2020, 12:43 PM IST

பெண்களை பின் தொடர்வோருக்கான தண்டனையை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளான உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் உரையர்றினார். அப்போது, வரதட்சணைக் கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.`இது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்துக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழகங்கப்படும் என்றும், பெண்களை தவறான நோக்கத்துடன் பின்தொடரும் குற்றத்துக்கு 5 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக தண்டனை உயர்த்தப்பட்டிருக்கிறது எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Penalty for dowry torture increased to 10 years...edappadi palanisamy

மேலும், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்லூரி அமைக்க நடப்பாண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் புதிய  பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios