திடீரென மூச்சு திணறல்.. திமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
அவரது மறைவு திமுகவிற்கு பேரிழப்பாகும். அன்பழகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பழனி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மறைவுக்கு அக்கட்சியில் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக நிர்வாகியுமான அன்பழகன் (65) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீரென உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- பழனி சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் எம். அன்பழகன் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 2006 – 2011 கழக ஆட்சியின் போது, கழகத்தின் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக மக்கள் பணியாற்றியவர்.
அவரது மறைவு திமுகவிற்கு பேரிழப்பாகும். அன்பழகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.