வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளஅறிக்கையின் விவரம் வருமாறு:
அறமும் பொருளும் தழைக்கவும், இன்பம் எங்கும் பொங்கவும் முக்கியமாகவிளங்குவதுமழை. மழைஇல்லாவிட்டால் பசும்புலலின் தலையைக் கூடக் காணமுடியாதுஎன்பர். அதனால்தான், 'மாமழைபோற்றுதும், மாமழைபோற்றுதும்' என்றுசிலப்பதிகாரத்தில் மழையைப் போற்றுகின்றார் இளங்கோவடிகள். திருவள்ளுவரும் 'வான் சிறப்பு' எனத் தனிஅதிகாரம் கொடுத்துமழையைப் போற்றுகின்றார்.
இப்படிப்பட்டஇன்றியமையாத் தன்மைவாய்ந்தமழைஅதிகமாகப் பெய்து, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டுஓடிகடலில் கலப்பதோடுமட்டுமல்லாமல், கரையைஉடைத்துக் கொண்டுஉயிர்களுக்கும், பயிர்களுக்கும் சேதம் விளைவிக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. இந்த சேதத்தைத்தடுக்கும் வகையிலும், தேவைப்படும் காலங்களில் பாசனத்திற்குஉதவும் வகையிலும் கல்லணை, மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, வைகைஅணைஎனபல்வேறுஅணைகள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ளன.

இந்தஆண்டுதென்மேற்குப்பருவமழைநன்குபெய்துகொண்டிருப்பதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ளபெரியஅணைக்கட்டுகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடுஅளவுக்குத்தண்ணீர் நிரம்பிஉள்ளதாகவும், குறிப்பாகமேற்குமற்றும் தெற்குபகுதிகளில் உள்ளநீர்நிலைகள் நிரம்பிஉள்ளதாகவும், 120 அடிஆழமுள்ளமேட்டூர் அணையில் 92 அடிவரைதற்போதுதண்ணீர் உள்ளநிலையில, மேட்டூர் அணைக்கானநீர்வரத்துகிட்டத்தட்ட 16,000 கனஅடிஎன்றஅளவில் உள்ளதால், இந்தவாரத்திற்குள் அணையின் நீர் மட்டம் 100 அடியைத்தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.
இதேபோன்று, பவானிசாகர் அணையில் 92 விழுக்காடுஅளவுக்குநீர் உள்ளதாகவும், பரம்பிக்குளம் -ஆழியாறுஆகியவைமுழுக் கொள்ளளவைஎட்டும் நிலையில் உள்ளதாகவும், சோலையாறுஅணைதனதுமுழுக் கொள்ளளவைஎட்டிவிட்டதாகவும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணிஆகியவற்றில் கிட்டத்தட்ட 90 விழுக்காடுஅளவுக்குநீர் உள்ளதாகவும், தென்கிழக்குஅரபிக் கடலில் குறைந்தகாற்றழுத்தம் உருவாகிஉள்ளதன் காரணமாக, கேரளாமற்றும் கர்நாடகமாநிலங்களிலும், தென் தமிழ்நாட்டிலும் மழைபெய்துவருவதன் காரணமாகவெள்ளப் பெருக்குஏற்பட்டுதாழ்வானகுடியிருப்புகளுக்குள்ளும், விவசாயநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துபயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதுகுறித்து, முன்னெச்சரிக்கைமற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதுகுறித்துகாணொலிக் காட்சிமூலம் நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரிமற்றும் நாமக்கல் மாவட்டஆட்சித் தலைவர்களுக்குமுதல்வரால் ஏற்கனவேஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், வளிமண்டலமேலடுக்குச்சுழற்சிகாரணமாக, மேற்குத்தொடர்ச்சிமலையைஒட்டியமாவட்டங்கள் மறறும் கடலோரமாவட்டங்களில் இந்தமாதம் 22 ஆம் தேதிவரைமழைபெய்யவாய்ப்புஇருப்பதாகவும், நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலிஆகியமாவட்டங்களில் கனமழைபெய்யும் என்றும், திருப்பத்தூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர், விழுப்புரம் ஆகியமாவட்டங்களில் மிதமானமழைபெய்யும்என்றும் இந்தியவானிலைஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ளஅனைத்துஅணைகளும் நிரம்பக் கூடியவாய்ப்புகள் உள்ளன. இவ்வாறுஅனைத்துஅணைகளும் நிரம்பி, வடகிழக்குப்பருவமழையும் அடுத்துதொடங்கிவிட்டால், மழைநீர் அனைத்தும் தாழ்வானகுடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், விவசாயநிலங்களுக்குள்ளும் சென்றுவிடும் அபாயம் ஏற்படுவதோடு, மிகப் பெரியசேதத்தையும் விளைவிக்கும் சூழ்நிலைஏற்படும்.

எனவே, வடகிழக்குப்பருவமழைதொடங்குவதற்குமுன்புதமிழ்நாட்டில் உள்ளஅனைத்துமாவட்டங்களுக்கும் அமைச்சர்களையும், இந்தியஆட்சிப் பணிஅதிகாரிகளையும் அனுப்பிதகுந்தமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைமேற்கொள்வதுகுறித்தும், வெள்ளப் பெருக்குஏற்படின் பாதிப்புக்குஉள்ளாவோர்க்குத் தேவையானஉதவிகளைபோர்க்காலஅடிப்படையில் மேற்கொள்வதுகுறித்தும் உரியஅறிவுரைகளைவழங்குமாறுகேட்டுக் கொள்கிறேன்என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
