வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

அறமும்பொருளும்தழைக்கவும்‌, இன்பம்எங்கும்பொங்கவும்முக்கியமாக விளங்குவது மழை. மழை இல்லாவிட்டால்பசும்புலலின்தலையைக்கூடக்காண முடியாது என்பர்‌. அதனால் தான்‌, 'மாமழை போற்றுதும்‌, மாமழை போற்றுதும்‌' என்று சிலப்பதிகாரத்தில்மழையைப்போற்றுகின்றார்இளங்கோவடிகள்‌. திருவள்ளுவரும்‌ 'வான்சிறப்பு' எனத்தனி அதிகாரம்கொடுத்து மழையைப்போற்றுகின்றார்‌.

இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த மழை அதிகமாகப்பெய்து, ஆற்றில்வெள்ளம்பெருக்கெடுத்துக்கரைபுரண்டு ஓடி கடலில்கலப்பதோடு மட்டுமல்லாமல்‌, கரையை உடைத்துக்கொண்டு உயிர்களுக்கும்‌, பயிர்களுக்கும்சேதம்விளைவிக்கும்நிலைமையும்ஏற்படுகிறது. இந்தசேதத்தைத் தடுக்கும்வகையிலும்‌, தேவைப்படும்காலங்களில்பாசனத்திற்கு உதவும்வகையிலும்கல்லணை, மேட்டூர்அணை, பவானிசாகர்அணை, வைகை அணை என பல்வேறு அணைகள்தமிழ்நாட்டில்கட்டப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்து கொண்டிருப்பதன்காரணமாக, தமிழ்நாட்டில்உள்ள பெரிய அணைக்கட்டுகளில்கிட்டத்தட்ட 80 விழுக்காடு அளவுக்குத் தண்ணீர்நிரம்பி உள்ளதாகவும்‌, குறிப்பாக மேற்கு மற்றும்தெற்கு பகுதிகளில்உள்ள நீர்நிலைகள்நிரம்பி உள்ளதாகவும்‌, 120 அடி ஆழமுள்ள மேட்டூர்அணையில்‌ 92 அடி வரை தற்போது தண்ணீர்உள்ள நிலையில, மேட்டூர்அணைக்கான நீர்வரத்து கிட்டத்தட்ட 16,000 கன அடி என்ற அளவில்உள்ளதால்‌, இந்த வாரத்திற்குள்அணையின்நீர்மட்டம்‌ 100 அடியைத் தாண்டிவிடும்என்றும்கூறப்படுகிறது.

இதேபோன்று, பவானிசாகர்அணையில்‌ 92 விழுக்காடு அளவுக்கு நீர்உள்ளதாகவும்‌, பரம்பிக்குளம்‌ -ஆழியாறு ஆகியவை முழுக்கொள்ளளவை எட்டும்நிலையில்உள்ளதாகவும்‌, சோலையாறு அணை தனது முழுக்கொள்ளளவை எட்டிவிட்டதாகவும்‌, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகியவற்றில்கிட்டத்தட்ட 90 விழுக்காடு அளவுக்கு நீர்உள்ளதாகவும்‌, தென்கிழக்கு அரபிக்கடலில்குறைந்த காற்றழுத்தம்உருவாகி உள்ளதன்காரணமாக, கேரளா மற்றும்கர்நாடக மாநிலங்களிலும்‌, தென்தமிழ்நாட்டிலும்மழை பெய்து வருவதன்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான குடியிருப்புகளுக்குள்ளும்‌, விவசாய நிலங்களுக்குள்ளும்தண்ணீர்புகுந்து பயிர்ச்சேதம்ஏற்பட்டுள்ளதாகவும்தகவல்கள்வந்துள்ளன.

இது குறித்து, முன்னெச்சரிக்கை மற்றும்நிவாரணப்பணிகள்மேற்கொள்வது குறித்து காணொலிக்காட்சி மூலம்நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும்நாமக்கல்மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு முதல்வரால்ஏற்கனவே அறிவுரைகள்வழங்கப்பட்டுள்ளன.

இந்தச்சூழ்நிலையில்‌, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்மறறும்கடலோர மாவட்டங்களில்இந்த மாதம்‌ 22 ஆம்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்‌, நீலகிரி, திண்டுக்கல்‌, கன்னியாகுமரி, கோயம்புத்தூர்‌, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர்‌, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில்கனமழை பெய்யும்என்றும்‌, திருப்பத்தூர்‌, ஈரோடு, தர்மபுரி, நாமக்கல்‌, கரூர்‌, விழுப்புரம்ஆகிய மாவட்டங்களில்மிதமான மழை பெய்யும் என்றும்இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, தமிழ்நாட்டில்உள்ள அனைத்து அணைகளும்நிரம்பக்கூடிய வாய்ப்புகள்உள்ளன. இவ்வாறு அனைத்து அணைகளும்நிரம்பி, வடகிழக்குப் பருவ மழையும்அடுத்து தொடங்கிவிட்டால்‌, மழை நீர்அனைத்தும்தாழ்வான குடியிருப்புப்பகுதிகளுக்குள்ளும்‌, விவசாய நிலங்களுக்குள்ளும்சென்றுவிடும்அபாயம்ஏற்படுவதோடு, மிகப்பெரிய சேதத்தையும்விளைவிக்கும்சூழ்நிலை ஏற்படும்‌.

எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டில்உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும்அமைச்சர்களையும்‌, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளையும்அனுப்பி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும்‌, வெள்ளப்பெருக்கு ஏற்படின்பாதிப்புக்கு உள்ளாவோர்க்குத்தேவையான உதவிகளை போர்க்கால அடிப்படையில்மேற்கொள்வது குறித்தும்உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

 

Scroll to load tweet…