தேனி அருகே நடக்க முடியாத தந்தை, மனநலம் பாதிக்கப்பட்ட தாய் ஆகியோரை பராமரிக்க கூலி வேலைக்குச் சென்ற 13 வயது சிறுமிக்கு வீடு கட்டிக் கொடுத்து அந்த குடும்பத்தின பராமரிப்புச் செலவுகளையும் துணை முதலமைச்சர் ஏற்றுள்ளார், இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தேனிமாவட்டம்சங்கரலிங்கபுரத்தைசேர்ந்தவர் சந்திர சேகர். இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு அனிதா என்ற 13 வயது மகள் உள்ளார். அருகில் உள்ள பள்ளியில் அவர் படித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சந்திரசேகருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்ப்ட்டார். அவரால் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. மகிழ்ச்சியோடு பள்ளி சென்று கொண்டிருந்த அனிதாவின் தலையில் இது இடியாக இறங்கியது.

என்ன செய்வதென்று அந்த சிறுமி தவித்துப் போனார். தனது தலைவிதியை நொந்து கொண்ட அனிதா பள்ளி செல்வதை நிறுத்தினார். நடக்க முடியாத தந்தையையும், தாயையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அந்த சிறுமியின் தலையில் விழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் கூலி வேலைக்கு போகத் தொடங்கினார்.

இந்த சிறுமி குறித்த செய்தி தனியார்தொலைக்காட்சியில்செய்திஒளிபரப்பானது. இதைப் பார்த்த பலரும் அனிதாவைசந்தித்துஉதவிகள்செய்தனர். அப்போதுதான் இந்தச்செய்திதுணைமுதலமைச்சர் ஓபிஎஸ் கவனத்திற்குகொண்டுசெல்லப்பட்டது. இதனைஅடுத்துபாதிக்கப்பட்டசந்திரசேகர்மற்றும்அவரதுமகள்அனிதாவைநேரில்சந்தித்துதேவையானஉதவிகளைவழங்குமாறுதனதுஉதவியாளர்களுக்குஓபிஎஸ் உத்திரவிட்டார்.

இதையடுத்து சந்திரசேகருக்குபோர்வை, தலையணைகளைவழங்கியதோடு, முதல்கட்டமாக 25 ஆயிரம்ரூபாய்உதவித்தொகையையும் ஓபிஎஸ் வழங்கினார். மேலும்சந்திரசேகரின்வீட்டினைஇடித்துநவீனகழிப்பறைவசதியுடன்கூடியபுதியவீட்டினைஓபிஎஸ் கட்டிக் கொடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் அனிதாவின்குடும்பசெலவிற்குமாதந்தோறும் 3000 ரூபாயினைஅவரதுவங்கிகணக்கில்அளிக்கஉள்ளதாகவும், அனிதாவின்படிப்புசெலவுமட்டுமின்றிஅவரின்திருமணசெலவுகள்வரைஅனைத்தையும்தான்ஏற்றுகொள்வதாகவும்துணைமுதலமைச்சர் ஓபிஎஸ்உறுதிஅளித்துள்ளார்.
