ஒபிஎஸ் :

கனத்த இதயத்துடன் நேற்று இரவு , ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சுமார் 35 நிமிடம் தொடர்ந்து தியானத்தில் ஈடுப்பட்டு இருந்தார் ஒ பி எஸ் . பின்னர் பெருமூச்சியுடன், தெளிவான சிந்தனையுடன் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஒபிஎஸ், பல்வேறு உண்மைகளை மனம் திறந்து பேசினார்.

ராஜினாமா வாபஸ் :

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பின்னர், ஒபிஎஸ் அவர்களுக்கு, மக்களின் அதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சில எம் எல் ஏக்களும் ஒ பிஎஸ் -கு , ஆதரவாக களம் இறங்க தொடங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து பேசிய ஒ பிஎஸ், தொண்டர்களின் ஆதரவும் , மக்கள் ஆதரவும் இருக்கும் தருவாயில், விருப்பமே இல்லாமல் கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்த தன்னுடைய முதல்வர் பதிவியை திரும்ப பெற ஆளுநரை நேரில் சந்தித்து , ராஜினாமாவை திரும்ப பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வீதி வீதியாக, கிராமம் கிராமமாக ......!

மக்களின் மீது முழு அக்கரை கொண்ட ஒபிஎஸ், இனி தெரு தெருவாய் கிராமம் கிராமமாய் , மக்களை தேடி சென்று , அவர்களுக்கு தேவையானதை செய்ய தனக்கு முழு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உதாரணம் :

வர்தா புயலின் போது, தானும் களத்தில் இறங்கி சுத்தப்படுத்தியவர் ஒபிஎஸ், அதே வேளையில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டிய போதும், நேரில் சென்று ஆய்வு பணிகளை துரித படுத்தியவர் ஒபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.