விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்து பேசினார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீட்டை கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓர் ஆண்டில் 3 மாதங்களுக்கு ரூ.3000 இழப்பீடு தரவேண்டும் என வலியுறுத்தினேன். முதலமைச்சரும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
