இங்கு முக்கியமாக கவனம் ஈர்த்தது மோடியின் ஆடைகள். ஒரே நாளில் 5 ஆடைகளை மாற்றினார். 

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் ரூ.339 கோடி செலவிலான காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்தர மோடி துவக்கி வைத்தார் மோடி. இதற்காக வந்தவருக்கு சாலையில் மறித்து அளிக்கப்பட்ட தலைப்பாகை, காவித்துண்டை அணிந்து மக்களுடன் கலந்து மகிழ்ந்தார்.

இங்கு முக்கியமாக கவனம் ஈர்த்தது மோடியின் ஆடைகள். ஒரே நாளில் 5 ஆடைகளை மாற்றினார். முழுக் கை, நீளமான காக்கி நிற குர்தா, வெள்ளை சுடிதார் மற்றும் பழுப்பு நிற சால்வையுடன் பிரதமர் வாரணாசிக்கு வந்தார். பின்னர் கால பைரவர் கோவிலுக்கு சென்று வழிபட்ட பிரதமர் மோடி, காவி நிற சால்வை அணிந்திருந்தார்.

உள்ளூர்வாசிகள் அவரை வரவேற்கும் போது, ​​அவர் தனது பாதுகாப்புப் பணியாளர்களை ஒதுங்கி நிற்கச் சொல்லி, இளஞ்சிவப்பு நிற 'பக்டி' (தலைப்பாகை) மற்றும் ஒரு மனிதரிடமிருந்து காவி நிற தாவணியை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் பிரார்த்தனை செய்ய சென்ற பிரதமர் வாரணாசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடினார். இதற்காக, அவர் தனது ஆடையை மாற்றி, காவி நிற பேண்ட் அணிந்திருந்தார், அதனுடன் வெர்மில்லியன் ஷேட் கொண்ட ஸ்வெட்டருடன் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற தாவணியை கழுத்தில் முடிச்சு போட்டார்.

இதைத் தொடர்ந்து, கடுகு நிற குர்தா மற்றும் தளர்வான லோயர் மற்றும் நீண்ட தந்த தாவணியுடன் பிரதமர் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்தார். அவர் நெற்றியிலும் திக்கா இருந்தது.

அடுத்து இரவு நேரத்தில் கோர்ட் சூட் போட்டு வாரணாசி நகரில் திடீர் விசிட் அடித்தார். ஒரே நாளில் இத்தனை உடைகளை மாற்றிய பிரதமர் என எதிர்கட்சியினர் கிண்டலடித்து வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…