புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை மழை நீர் முற்றிலுமாக சூழ்ந்துள்ளது.
புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் முதல்வர் நாராயணசாமி வசிக்கும் வீட்டை மழை நீர் முற்றிலுமாக சூழ்ந்துள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி-மரக்காணம் இடையே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் கன மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வசிக்கும் எல்லையம்மன் கோயில் வீதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் புதுச்சேரியின் மையப்பகுதிகளில் உள்ள பாரதி வீதி, புஸ்சி வீதி பல சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. புதுச்சேரியில் புயல் கரையை கடந்த பின்னரும் கடல்அக்ரோசத்துடன் காணப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 26, 2020, 5:02 PM IST