News does not accept the explanation - Action by the EC ttv shock

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பின்னர், முதலமைச்சர் பதவிற்கு சசிகலா வர முயன்றதால் ஓ.பி.எஸ் சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து அதிமுக இரண்டு அணியாக உடைந்தது. ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனனும் சில எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் சசிகலா தரப்பை விட்டு வெளியேறினர்.

இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. சிறைக்கு செல்லும் முன் சசிகலா அவரது உறவினரான டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவிட்டார்.

பின்னர், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனமானது செல்லாது என ஓ.பி.எஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதற்கு பிப்ரவரி 28 க்குள் பதிலளிக்குமாறு சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதைதொடர்ந்து சசிகலா சார்பில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் சட்ட விதிகளின் படியே சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், டி.டி.தினகரன் அளித்த பதிலை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக சார்பில் இதுவரை அனுப்பட்ட 5 பதில்களும் ஏற்கத்தக்கவை அல்ல என தெரிவித்துள்ளது.

சசிகலாதான் தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க வேண்டும். அல்லது சசிகலாவால் அங்கீகாரம் செய்யப்பட்டவர் தான் பதிலளிக்க வேண்டும்.

கட்சியின் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர் மட்டுமே பதில் அளிக்க முடியும். டி.டி.வி தினகரன் எந்த ஒரு பதவியிலும் இல்லை.

தினகரன் கையெழுத்து கொண்ட பதிலை ஏற்க முடியாது. தினகரனால் தரப்பட்ட பதிலில் தினகரனுக்கான பொறுப்பு விவரங்கள் இடம் பெறவில்லை.

பொதுச்செயலாளர் நியமனம் குறித்த நோட்டீசுக்கு மார்ச் 10 தேதிக்குள் சசிகலாவின் கையெழுத்திட்ட பதிலை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.