Asianet News TamilAsianet News Tamil

26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்..! முழு விவரம் இதோ...!

மேலும் நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது.  இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 

New restrictions of the Government of Tamil Nadu coming into force from the 26th
Author
Chennai, First Published Apr 24, 2021, 7:18 PM IST

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25 .3 .2021 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு, மற்றும் பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளுடன் 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது.  இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

New restrictions of the Government of Tamil Nadu coming into force from the 26th

அதே போன்று தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழா கூட்டங்கள், போன்ற காரணங்களினாலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற தவறுவதால் சமீபகாலமாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக 28 .3 .2021 அன்று 13,070 நபர்கள் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 23 .4 .2021 அன்று கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 95 ,048 ஆக உயர்ந்துள்ளது.

New restrictions of the Government of Tamil Nadu coming into force from the 26th

நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும் நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொது மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உடன் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் 26.4.2021 அதிகாலை 4 மணி முதல் கீழ்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்...  அது அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

New restrictions of the Government of Tamil Nadu coming into force from the 26th

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறி கடைகள், மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.  தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பல சரக்குகள் மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப் படுகிறது.  இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் .

சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்களும் இயங்க அனுமதி இல்லை.

New restrictions of the Government of Tamil Nadu coming into force from the 26th

அனைத்து உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. 

அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டுடன் இயங்கலாம்.

New restrictions of the Government of Tamil Nadu coming into force from the 26th

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை, எனினும் தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகள், வழிபாட்டு தளங்கள் மூலம் நடத்துவதற்கு தடை இல்லை. நோய்த்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், இந்து சமய துறை ஆணையரிடம் அனுமதி பெற்று இருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்து இருந்தாலோ... முன்னேற்பாடுகள் செய்து இருந்தாலும் 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

New restrictions of the Government of Tamil Nadu coming into force from the 26th

திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகள் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் ஐம்பது சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து கண்டிப்பாக பணிபுரிய வேண்டும். 

அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் செயல்பட அனுமதி இல்லை எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதுச்சேரியை தவிர்த்து ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்கள் இ பாஸ் பெற உரிய சமூக  வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தை தமிழ் நாட்டுக்குள் நுழையும் போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் கப்பல் மூலம் பயணியர் அனைவரும் குறிப்பிட்ட இணைய தளத்தை சென்று விபரத்தினை தமிழ் நாட்டுக்குள் நுழையும் போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். 

New restrictions of the Government of Tamil Nadu coming into force from the 26th

தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் இருக்கைகள் இருக்கைகள் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. டாக்சியில் 3 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆட்டோவில் ஓட்டுனர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தாமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு குரங்கு அமலில் இருக்கும். 

New restrictions of the Government of Tamil Nadu coming into force from the 26th

மேலும் பணிக்கு செல்லும் பணியாளர்கள் பணிக்கு சென்று வருகையில் தங்கள் நிறுவன வழங்கியுள்ள அடையாள அட்டையில் தவறாமல் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் வெளியே செல்லும் போது பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் வீட்டில் பணிபுரியும் இடங்களிலும், அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதை வெளியிடங்களில் முக கவசம் அணிந்து செல்வதையும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது அவசியம். தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும் நோய் தொற்று அறிகுறி தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெற வேண்டும் . பொதுமக்கள் அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios