Asianet News TamilAsianet News Tamil

சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த இருவருக்கு BF7 Variant கொரோனாவா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்.!

சீனாவிலிருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் ததனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

New Coronavirus for 2 people from China? Minister Ma. subramanian
Author
First Published Dec 28, 2022, 11:05 AM IST

சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- சீனாவிலிருந்து மதுரைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 4 நாட்களில் எந்த மாதிரியான வைரஸ் தொற்று என்பது தெரியவரும்.

New Coronavirus for 2 people from China? Minister Ma. subramanian

தொற்றால் பாதிக்கப்பட்ட தாய், மகள் நலமுடன் உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

New Coronavirus for 2 people from China? Minister Ma. subramanian

தியேட்டர்கள், திருமண நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதன் மூலம் நம்மை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பாதுகாத்திட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios