கடந்த ஒரு வார காலமாக அதிமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகுவதாக எழுந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கபட்டுள்ளது.
இன்று நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையவுள்ளார்.
மதிமுகவின் முக்கிய பேச்சாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத் வைகோவுக்கு அடுத்த இடத்தில மேடை பேச்சில் வல்லவரான நாஞ்சில் சம்பத் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

அப்போது அவருக்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கட்சியின் உறுப்பினர் அட்டையுடன் இன்னோவா கார் ஒன்றையும் பரிசளித்தார்.
அன்று முதல் அவரை சிலர் கிண்டலாக இன்னோவா சம்பத் என்று அழைத்தனர். அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் என்ற பெரிய பதவியை ஜெயலலிதா வழங்கினார்.
ஆனால் அதிமுக கூட்டணி பற்றி தானாக இவர் கருத்து கூறியதால் இவரது பதவி பறிக்கப்பட்டது
அப்போது முதல் வெறும் பேச்சாளராக மட்டும் இருந்து வந்தார். இநிலையில் கடந்த டிசம்பர் 5 அன்று ஜெ மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல மர்மங்கள் ஏற்பட்டது

இந்த சூழ்நிலையில் நாஞ்சில் சம்பத் ஒதுங்கியிருந்தார். அவர் திமுகவில் சேரப்போவதாக பேச்சு அடிப்பட்டது
இதற்கு மறுப்பு தெரிவித்து தனது முகநூலில் தான் ஜெ. மறைந்த துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறி தான் திமுகவுக்கு செல்லவில்லை என்று மறுத்திருந்தார்.
ஆனால் மதிமுகவில் இவரது முந்தய நண்பர்களும் தற்போது திமுகவில் ஐக்கியமாகிவிட்ட ஜோயல் மற்றும் டாக்டர் சரவணன் இருவரும் பேசி ஏற்பாடு செய்ததின் பெயரில் திமுகவில் இணைத்து கொள்ள ஸ்டாலின் ஒப்புதல் தனது விட்டதாக கூறபடுகிறது
இதையடுத்து இன்று அல்லது நாளை நாஞ்சில் சம்பத் திமுகவில் தன்னை இணைத்துக்கொள்வார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
