ஊரில் கடைகோடியில் இருக்கும் தொண்டன் பதவியை எதிர்பார்ப்பதில்லை. எனவே எம்.எல்.ஏ,., எம்.பி., ஆசையை எல்லாம் விட்டு விடுங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தி உள்ளார். 

ஊரில் கடைகோடியில் இருக்கும் தொண்டன் பதவியை எதிர்பார்ப்பதில்லை. எனவே எம்.எல்.ஏ,., எம்.பி., ஆசையை எல்லாம் விட்டு விடுங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டமானது அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி, தலைமையில் தலைமை நிலையமான தாயகத்தில் நடைபெற்றது.

இதில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ’’ஊரில் கடைகோடியில் இருக்கும் தொண்டன் பதவியை எதிர்பார்ப்பதில்லை. எனவே எம்.எல்.ஏ,., எம்.பி., ஆசையை எல்லாம் விட்டு விடுங்கள்’’ என்று வைகோ, கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தினார்