மிசோரம்  முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட ஜோரம்தாங்கா  பூரண மதுவிலக்கு சட்டத்தில் தனது முதல் கையெழுத்தை போட்டு அசத்தினார்..

அண்மையில் நடைபெற்ற 5 மாநிலசட்டமன்றத்தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த மிசோரம் மாநிலத்தில் மிசோதேசியமுன்னணிஆட்சியைக்கைப்பற்றியுள்ளது.

 40 தொகுதிகளைக்கொண்டமிசோரமில், 26 இடங்களில்வெற்றிபெற்றுதனிப்பெரும்கட்சியாகமிசோதேசியமுன்னணிஉருவெடுத்துள்ளது.

இதையடுத்து, முதலமைச்சரைத்தேர்வுசெய்வதற்காகக்கட்சியின்எம்எல்ஏக்கள்ஆலோசனைக்கூட்டம்தலைநகர்ஐசாலில்நேற்றுநடைபெற்றது.. இதில், கட்சியின்தலைவர்ஜோரம்தங்கா, சட்டமன்றக்கட்சிதலைவராகத்தேர்வுசெய்யப்பட்டார். தொடர்ந்துஆளுநர்ராஜசேகரனிடம்ஆட்சிஅமைக்கஉரிமைகோரப்பட்டது. ஆளுநர்அழைப்புவிடுத்ததையடுத்துஇன்றுஅவர்பதவிஏற்றுக்கொண்டார்.

மிசோரம்மாநிலத்தில்ஏற்கனவே 1998 முதல் 2008 வரை தொடர்ந்து 2 முறைமுதலமைச்சராக இருந்தஜோரம்தாங்காதற்போது 3ஆவதுமுறையாகபதவிஏற்றுள்ளார். ஆளுநர்மாளிகையில்இன்றுபிற்பகலில் நடந்தபதவியேற்புவிழாவின்போதுஆளுநர்ராஜசேகரன்பதவிப்பிரமாணம்செய்துவைத்துள்ளார்.

மிசோரம் மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டால் தனது முதல் கையெழுத்து பூரணமதுவிலக்குசட்டத்தில் தான் என ஜோரம்தாங்காதெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் பதவியேற்றக் கொண்டவுடன் பூரண மதுவிலக்கு சட்டத்தில கையெழுத்திட்டுள்ளார்.