Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம் - மறைந்த முதல்வர் ஜெவுக்கு இரங்கல்

ministers meeting-assembly-under-ops-94er4e
Author
First Published Dec 10, 2016, 11:54 AM IST


முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்ற பிறகு முதன்முதலாக நடைபெறும் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கபட்டார்.

அவரது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியுள்ளது.

ministers meeting-assembly-under-ops-94er4e

முன்னதாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த ஜெ.வின் உருவப்படத்திற்கு சசிகலா,  ஓபிஎஸ்,மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதிக்கு சென்று ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர் .

பின்னர் அனைவரும் தலைமை செயலகத்தில் கீழ்தளத்தில் உள்ள கூட்டரங்கில் கூடினர்.

ministers meeting-assembly-under-ops-94er4e

இதனை தொடர்ந்து அங்கு ஜெ.மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது .

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்,ஜல்லிக்கட்டு,காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios