அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தண்ணிதெளித்த அதிமுக...?? இஸ்லாமியர்களை தாக்கியதால் வந்த விபரீதம்...!!
பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களைப் பற்றி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார் .
பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அதிமுகவின் கருத்து அல்ல என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் . பாஜக நிர்வாகி கொலைக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்றும், இந்துக்காளாலும் வன்முறைகளில் இறங்கமுடியும் என்றும் பதிலடி கொடுக்க முடியும் என்று அவர் எச்சரித்து பேசி இருந்தது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார் .
சென்னை ராயபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர் . அதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார் . அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் , பாரதிய ஜனதா நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்களைப் பற்றி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றார் . அதுமட்டுமல்லாமல் அவர் பேசியது அதிமுகவின் கருத்து கிடையாது , அது அவரது தனிப்பட்ட கருத்தாகும் என்றார் .
அவரது கருத்து அது இல்லாதபோது கவர்னரிடம் எப்படி முறையிடலாம் எனவும் கேள்வி எழுப்பினார் . டிஎன்பிஎஸ்சி தேர்தலில் தவறு செய்தவர்கள் யாரும் அதில் இருந்து தப்பிக்க முடியாது என்ற கூறிய அமைச்சர் , தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார். இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி திமுக நடத்தும் போராட்டம் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப் படுத்துவதற்கான ஏற்பாடு எனவும் அப்போது அவர் குற்றஞ்சாட்டினார்.