Asianet News TamilAsianet News Tamil

வியாபாரிகளே எச்சரிக்கை.. கடையை திறந்து வச்சுட்டு போகாதீங்க.. பிரியாணி கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையன்.

நேற்றைய முன்தினம் இந்த கடையில் ஆள் இல்லாத நேரம் பார்த்து வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீர் குடிப்பது போல் உள்ளே நுழைந்து செல்போனை திருடி சென்றிருக்கிறார்.

Merchants are warned .. Do not leave the store open. the robber sinached mobile phone in briyani shop.
Author
Chennai, First Published Jul 16, 2021, 11:11 AM IST

பிரியாணி கடையில் மர்ம நபர் ஒருவர் செல்போன் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கக்கூடிய பிரியாணி கடை ஒன்றில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் மொபைல் போனை எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

Merchants are warned .. Do not leave the store open. the robber sinached mobile phone in briyani shop.

நேற்றைய முன்தினம் இந்த கடையில் ஆள் இல்லாத நேரம் பார்த்து வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீர் குடிப்பது போல் உள்ளே நுழைந்து செல்போனை திருடி சென்றிருக்கிறார். அதன் பிறகு கடை உரிமையாளர் தன்னுடைய செல்போன் காணாமல் போயிருப்பதை கண்டு சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது சிசிடிவி காட்சியில் மர்ம நபர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனை எடுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

Merchants are warned .. Do not leave the store open. the robber sinached mobile phone in briyani shop.

இதைக் கண்டு அதிரிச்சியடைந்த கடை உரிமையாளர், உடனடியாக அருகில் இருக்கக்கூடிய ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பார்க்கும் பொழுது வடமாநிலத்தை சேர்ந்த நபர் என்று போலீசார் அடையாளம் கண்டு பிடித்து இருக்கிறார்கள். குறிப்பாக அந்த நபர் அடுத்தடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios